Sunday, April 11, 2010

மீண்டும் நடிப்பேன் : சோனியா அகர்வால்


செல்வராகவனை விவாகரத்து செய்த சோனியா அகர்வால் மீண்டும் நடிக்க வருகிறார்.

இதுபற்றி அவர் கூறியதாவது:-

செல்வராகவனும், நானும் கணவன்-மனைவியாக வாழ்ந்த நாட்கள் மறக்க முடியாதவை. விவாகரத்து செய்யும் போது நிறைய யோசித்தேன். பிறகு நடப்பது நடக்கும் என்று சம்மதித்தேன். இப்போது நான் சுயமான பெண். இந்த சுதந்திரம் எனக்கு பிடித்து இருக்கிறது.

விவகாரத்தானதும் சொந்த ஊருக்கு அழைத்தனர். ஆனால் எனக்கு போக மனமில்லை. மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளேன். கதைகள் கேட்டுக் கொண்டு இருக்கிறேன். விரைவில் நடிப்பேன்.

திருமணத்துக்கு பிறகு நடிக்க ஆர்வம் இல்லாமல் இருந்தேன். இப்போது ஆசை வந்துள்ளது.


No comments:

Post a Comment

சூரியனின் கதை












நமது சூரியனும் அதன் கோள்களும் அமைந்துள்ள அண்டத்தினைப் பால் வழி என்பர். இரவு வேளையில், தெளிவான வானத்தில், கிழக்கு மேற்காகப் பிரகாசமான ஓர் ஒளிப்பட்டை அமைந்திருப்பதைக் காணலாம். இந்த ஒளிப்பட்டைக்குள் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் இருக்கின்றன. பாலாறு ஒன்று வானத்தில் பாய்வதாகக் கற்பனை செய்து கிரேக்க விஞ்ஞானிகள் இதற்குப் பால் வழி என்று பெயரிட்டனர். இந்தியத் தத்துவ ஞானிகள் 'ஆகாய கங்கை' என்றனர். பால் வழியின் ஒரு அந்தத்தில் நமது சூரியனும் அதன் கோள்களும் அமைந்திருக்கின்றன.


மாணவர்களுக்கு ஏற்ற அடிப்படை அறிவியல் நூல்கள் வெளிவர வேண்டிய அவசியம் இன்று உணரப்பட்டுள்ளது. பாடநூல்களோடு துணை நூல்கள் பலவும் வெளிவர வேண்டும். விரிந்து வரும் அறிவியல் உண்மைகளைச் சகலரும் இலகுவில் தெரிந்து கொள்வதற்கு இவ்வகை நூல்கள் வழி அமைக்கும்
.