இது குறித்து மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில் நடிகர் ரஜினிகாந்திற்கு ஆபத்து எதுவும் இல்லை என்றும் மருத்துவமனையில் இருந்து அவர் நாளை வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தன.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ராணா படத்தின் படப்பிடிப்பு ஏவிஎம் ஸ்டுடியோவில் இன்று தொடங்கியது.
நடிகர் ரஜினிகாந்த் முன்பதிவு செய்யப்பட்ட சில காட்சிகளில் நடித்துக்கொண்டிருந்தார். படப்பிடிப்பின்போது அவருக்கு எதிர்பாராத விதமாக திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதனால் அங்கிருந்து அவர் மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்ததும் ரசிகர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். இதனால் அங்கு பொலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் ரஜினிகாந்தின் மனைவி லதா, மகள்கள் உள்ளிட்ட நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் அருகில் இருந்து கவனித்து வருகின்றனர்.