நமது சூரியனும் அதன் கோள்களும் அமைந்துள்ள அண்டத்தினைப் பால் வழி என்பர். இரவு வேளையில், தெளிவான வானத்தில், கிழக்கு மேற்காகப் பிரகாசமான ஓர் ஒளிப்பட்டை அமைந்திருப்பதைக் காணலாம். இந்த ஒளிப்பட்டைக்குள் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் இருக்கின்றன. பாலாறு ஒன்று வானத்தில் பாய்வதாகக் கற்பனை செய்து கிரேக்க விஞ்ஞானிகள் இதற்குப் பால் வழி என்று பெயரிட்டனர். இந்தியத் தத்துவ ஞானிகள் 'ஆகாய கங்கை' என்றனர். பால் வழியின் ஒரு அந்தத்தில் நமது சூரியனும் அதன் கோள்களும் அமைந்திருக்கின்றன.
மாணவர்களுக்கு ஏற்ற அடிப்படை அறிவியல் நூல்கள் வெளிவர வேண்டிய அவசியம் இன்று உணரப்பட்டுள்ளது. பாடநூல்களோடு துணை நூல்கள் பலவும் வெளிவர வேண்டும். விரிந்து வரும் அறிவியல் உண்மைகளைச் சகலரும் இலகுவில் தெரிந்து கொள்வதற்கு இவ்வகை நூல்கள் வழி அமைக்கும்.
Sunday, February 7, 2010
பி.டி. கத்தரிக்காயை வர்த்தக நோக்கில் பார்க்கும் மத்திய அரசு: ஜகி வாசுதேவ்
பி.டி. கத்தரிக்காய்க்கு அனுமதி அளிப்பது தொடர்பாக மத்திய அரசு வர்த்தக நோக்கில் பரிசீலனை செய்து வருகிறது என ஈஷா யோக மைய நிறுவனர் ஜகி வாசுதேவ் கூறினார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப் பொருள்களில் மிகுந்த நச்சுத்தன்மை உள்ளது. பல ஆயிரம் ஆண்டுகளாக கத்தரிக்காய் சாகுபடி நன்றாக உள்ளது.
இந் நிலையில், ஆரோக்கியத்தைப் பாதிக்கும் பி.டி. ரக பயிர்களை சந்தைக்கு கொண்டு வரத் தேவையில்லை. இது பொறுப்பற்ற செயல். பி.டி. கத்தரிக்காய்க்கு அனுமதி அளித்தால் அனைத்து உணவுப் பொருள்களும் சந்தைக்கு வந்துவிடும். இது மிகுந்த ஆபத்தை விளைவிக்கும்.
ஐரோப்பா உள்பட பல்வேறு நாடுகளில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் அரசை மீறி தனியார் ஆதிக்கம் செலுத்தி வருவதால் வேறு வழியின்றி அங்கு பி.டி. ரக பயிர்கள் பயிரிடப்பட்டன. அதன் பாதிப்பு இன்றும் தெரிகிறது.
பி.டி. பயிர்களை பயிரிடக் கூடாது என வேளாண் விஞ்ஞானிகள், இயற்கை ஆர்வலர்கள், விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், மக்களின் நலனில் அக்கறை கொள்ளாமல் பி.டி. ரக பயிர்களை சந்தைக்கு கொண்டு வர மத்திய அரசு வர்த்தக நோக்கில் பரிசீலனை செய்து வருகிறது.
வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து விதைகளை வாங்கும் நிலை தொடர்ந்தால் இந்தியா அடிமைப்படும் சூழல் உருவாகும். நாட்டில் பல விதமான விதைகள் குறைந்து வருகின்றன. 60 சதம் பேர் சைவ உணவுகளையும், 40 சதம் பேர் அசைவ உணவுகளையும் விரும்பிச் சாப்பிடுகின்றனர்.
மனிதனுக்குத் தேவையான சத்து, சைவ உணவில்தான் இருக்கிறது. ஆனால், அதற்கு நல்ல விதைகள் தேவை. அவற்றை இயற்கையான முறையில் உருவாக்க வேண்டும்.
நல்ல விதைகள் விவசாயிகள் கையில் இருக்க வேண்டும். அதனால், மேற்கொள்ளும் ஆராய்ச்சிகள் பக்குவமாகவும், இயற்கையாகவும் இருப்பது அவசியம்.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய்க்கு அனுமதி அளிப்பது தொடர்பாக அவசரம் காட்டப்படமாட்டாது என தமிழக அரசு அறிவித்துள்ளது விவசாயிகளை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. இருப்பினும், அவற்றை முற்றிலும் தடை செய்ய வேண்டும். இது குறித்து ஈஷா தரப்பில் அரசிடம் வலியுறுத்தப்படும்.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரியை தடை செய்து அனைத்து மக்களையும் காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப் பொருள்களில் மிகுந்த நச்சுத்தன்மை உள்ளது. பல ஆயிரம் ஆண்டுகளாக கத்தரிக்காய் சாகுபடி நன்றாக உள்ளது.
இந் நிலையில், ஆரோக்கியத்தைப் பாதிக்கும் பி.டி. ரக பயிர்களை சந்தைக்கு கொண்டு வரத் தேவையில்லை. இது பொறுப்பற்ற செயல். பி.டி. கத்தரிக்காய்க்கு அனுமதி அளித்தால் அனைத்து உணவுப் பொருள்களும் சந்தைக்கு வந்துவிடும். இது மிகுந்த ஆபத்தை விளைவிக்கும்.
ஐரோப்பா உள்பட பல்வேறு நாடுகளில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் அரசை மீறி தனியார் ஆதிக்கம் செலுத்தி வருவதால் வேறு வழியின்றி அங்கு பி.டி. ரக பயிர்கள் பயிரிடப்பட்டன. அதன் பாதிப்பு இன்றும் தெரிகிறது.
பி.டி. பயிர்களை பயிரிடக் கூடாது என வேளாண் விஞ்ஞானிகள், இயற்கை ஆர்வலர்கள், விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், மக்களின் நலனில் அக்கறை கொள்ளாமல் பி.டி. ரக பயிர்களை சந்தைக்கு கொண்டு வர மத்திய அரசு வர்த்தக நோக்கில் பரிசீலனை செய்து வருகிறது.
வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து விதைகளை வாங்கும் நிலை தொடர்ந்தால் இந்தியா அடிமைப்படும் சூழல் உருவாகும். நாட்டில் பல விதமான விதைகள் குறைந்து வருகின்றன. 60 சதம் பேர் சைவ உணவுகளையும், 40 சதம் பேர் அசைவ உணவுகளையும் விரும்பிச் சாப்பிடுகின்றனர்.
மனிதனுக்குத் தேவையான சத்து, சைவ உணவில்தான் இருக்கிறது. ஆனால், அதற்கு நல்ல விதைகள் தேவை. அவற்றை இயற்கையான முறையில் உருவாக்க வேண்டும்.
நல்ல விதைகள் விவசாயிகள் கையில் இருக்க வேண்டும். அதனால், மேற்கொள்ளும் ஆராய்ச்சிகள் பக்குவமாகவும், இயற்கையாகவும் இருப்பது அவசியம்.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய்க்கு அனுமதி அளிப்பது தொடர்பாக அவசரம் காட்டப்படமாட்டாது என தமிழக அரசு அறிவித்துள்ளது விவசாயிகளை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. இருப்பினும், அவற்றை முற்றிலும் தடை செய்ய வேண்டும். இது குறித்து ஈஷா தரப்பில் அரசிடம் வலியுறுத்தப்படும்.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரியை தடை செய்து அனைத்து மக்களையும் காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Friday, February 5, 2010
தரமில்லாத அரசு பல்கலைகழகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.விஸ்வநாதன்
சென்னை, பிப். 06: விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன், சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: "தனியார் கல்லூரிகளின் வளர்ச்சிகளை ஊக்குவித்தால் மட்டுமே உயர் கல்வியில் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரிக்க முடியும். முதல் கட்டமாக அதிக கல்லூரிகளை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
யுஜிசி குழுவில் 1500 கல்வியாளர்கள் கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தி நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு அங்கீகாரம் வழங்கினர். ஆனால் தாண்டன் குழுவினர் டெல்லியில் இருந்து கொண்டே தகவல்களை கேட்டு தெரிந்து கொண்டு அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரைத்துள்ளனர்.
நிகர்நிலை அங்கீகாரம் பெற்று 2 ஆண்டுகளே ஆன பல பல்கலைக் கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரைத்துள்ளனர். பல்கலைக்கழகம் தொடங்கி குறைந்தது 10 ஆண்டுகள் கடந்தால்தான் முழு வளர்ச்சியை பெற முடியும். தரமில்லாத பல்கலைக்கழகங்கள் மீது தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம். அதற்கு முன்பு ஒரு அறிவிப்பாவது கொடுக்க வேண்டும். எங்கள் தவறுகளை சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்வோம்.
மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பல பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி மாணவர்கள் படிக்க எந்த வசதியும் இல்லை. அந்த பல்கலைக்கழகங்கள் மீதும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்கலைக்கழகங்களின் பிரச்னையில் அரசின் செயல்பாடு வெளிப்படையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்
யுஜிசி குழுவில் 1500 கல்வியாளர்கள் கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தி நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு அங்கீகாரம் வழங்கினர். ஆனால் தாண்டன் குழுவினர் டெல்லியில் இருந்து கொண்டே தகவல்களை கேட்டு தெரிந்து கொண்டு அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரைத்துள்ளனர்.
நிகர்நிலை அங்கீகாரம் பெற்று 2 ஆண்டுகளே ஆன பல பல்கலைக் கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரைத்துள்ளனர். பல்கலைக்கழகம் தொடங்கி குறைந்தது 10 ஆண்டுகள் கடந்தால்தான் முழு வளர்ச்சியை பெற முடியும். தரமில்லாத பல்கலைக்கழகங்கள் மீது தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம். அதற்கு முன்பு ஒரு அறிவிப்பாவது கொடுக்க வேண்டும். எங்கள் தவறுகளை சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்வோம்.
மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பல பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி மாணவர்கள் படிக்க எந்த வசதியும் இல்லை. அந்த பல்கலைக்கழகங்கள் மீதும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்கலைக்கழகங்களின் பிரச்னையில் அரசின் செயல்பாடு வெளிப்படையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்
Wednesday, February 3, 2010
பயமில்லாமல் தேர்வு எழுதுங்கள்: பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கடிதம்
பிளஸ் 2 மாணவ, மாணவிகள் தங்கள் பாடங்களை நன்றாக படித்து பயமில்லாமல் நம்பிக்கையுடன் தேர்வு எழுத வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மாணவ, மாணவி களுக்கு கடிதம் எழுதுகிறார்.
கடந்த ஆண்டு பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனித் தனியே கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் பொதுத் தேர்வினை நல்ல முறையில் பயமில்லாமல் எழுத வேண்டும் என்றும், பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு இது வாழ்க்கையின் திருப்பு முனையாக அமைவதால் மிக கவனத்துடன் தேர்வினை எழுதி வெற்றி பெற வேண்டும் எனவும் வாழ்த்தும், அறிவுரையும் கூறியிருந்தார்.
இக்கடிதம் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை மூலம் அனைத்து பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ, மாணவிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தேதியில் பிளஸ் 2 தேர்வு தொடங்குகிறது. இந்த ஆண்டும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கடிதம் எழுதுகிறார். இக்கடிதத்தில், மாணவ, மாணவிகள் நன்றாக படித்து பயமில்லாமல் நம்பிக்கையுடன் பொதுத் தேர்வினை எழுத வேண்டும் என்று அறிவுரை கூற இருக்கிறார். இந்த கடிதம் மாவட்ட கல்வி அலுவலகம் மூலம் அனைத்து பிளஸ் 2 மாணவ, மாணவி களுக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளது.
ஆசிரியர்கள் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு தேர்வு வரும் வரை முடிந்த வரை அனைத்து உதவிகளை யும் செய்து அவர்களை தேர் வில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான மையங்கள் அதிகப்படுத் தப்பட்டுள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் பொதுத் தேர்வு எழுதுவதற்கு அதிக தூரம் செல்ல வேண்டிய நிலை இருக்காது என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனித் தனியே கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் பொதுத் தேர்வினை நல்ல முறையில் பயமில்லாமல் எழுத வேண்டும் என்றும், பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு இது வாழ்க்கையின் திருப்பு முனையாக அமைவதால் மிக கவனத்துடன் தேர்வினை எழுதி வெற்றி பெற வேண்டும் எனவும் வாழ்த்தும், அறிவுரையும் கூறியிருந்தார்.
இக்கடிதம் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை மூலம் அனைத்து பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ, மாணவிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தேதியில் பிளஸ் 2 தேர்வு தொடங்குகிறது. இந்த ஆண்டும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கடிதம் எழுதுகிறார். இக்கடிதத்தில், மாணவ, மாணவிகள் நன்றாக படித்து பயமில்லாமல் நம்பிக்கையுடன் பொதுத் தேர்வினை எழுத வேண்டும் என்று அறிவுரை கூற இருக்கிறார். இந்த கடிதம் மாவட்ட கல்வி அலுவலகம் மூலம் அனைத்து பிளஸ் 2 மாணவ, மாணவி களுக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளது.
ஆசிரியர்கள் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு தேர்வு வரும் வரை முடிந்த வரை அனைத்து உதவிகளை யும் செய்து அவர்களை தேர் வில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான மையங்கள் அதிகப்படுத் தப்பட்டுள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் பொதுத் தேர்வு எழுதுவதற்கு அதிக தூரம் செல்ல வேண்டிய நிலை இருக்காது என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Posts (Atom)
சூரியனின் கதை
நமது சூரியனும் அதன் கோள்களும் அமைந்துள்ள அண்டத்தினைப் பால் வழி என்பர். இரவு வேளையில், தெளிவான வானத்தில், கிழக்கு மேற்காகப் பிரகாசமான ஓர் ஒளிப்பட்டை அமைந்திருப்பதைக் காணலாம். இந்த ஒளிப்பட்டைக்குள் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் இருக்கின்றன. பாலாறு ஒன்று வானத்தில் பாய்வதாகக் கற்பனை செய்து கிரேக்க விஞ்ஞானிகள் இதற்குப் பால் வழி என்று பெயரிட்டனர். இந்தியத் தத்துவ ஞானிகள் 'ஆகாய கங்கை' என்றனர். பால் வழியின் ஒரு அந்தத்தில் நமது சூரியனும் அதன் கோள்களும் அமைந்திருக்கின்றன.
மாணவர்களுக்கு ஏற்ற அடிப்படை அறிவியல் நூல்கள் வெளிவர வேண்டிய அவசியம் இன்று உணரப்பட்டுள்ளது. பாடநூல்களோடு துணை நூல்கள் பலவும் வெளிவர வேண்டும். விரிந்து வரும் அறிவியல் உண்மைகளைச் சகலரும் இலகுவில் தெரிந்து கொள்வதற்கு இவ்வகை நூல்கள் வழி அமைக்கும்.