Monday, December 20, 2010

எயிட்ஸ் நோயாளிகளை சுகப்படுத்த முடியும் - ஜெர்மனிய மருத்துவர்கள் :

எயிட்ஸ் நோயாளிகளை சுகப்படுத்த முடியும் என ஜெர்மனிய மருத்துவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். எச்.ஐ.வீ நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரை குணப்படுத்தியதாக ஜெர்மனிய மருத்துவர்ள் அறிவித்துள்ளனர்.

பேர்ளினில் வாழ்ந்து வரும் அமெரிக்கரான திமொத்தி பிரவுண் என்பவருக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. செமோதெரபி மற்றும் ஸ்டெம் செல் தெரபி ஆகியவற்றின் ஊடாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் முதலில் லுகேமியா நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், பின்னர் அவருக்கு எச்.ஐ.வீ நோய்த் தொற்று பரவியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மூன்று ஆண்டு சிகிச்சைகளின் பின்னர் லுகேமிய புற்று நோய் மற்றும் எயிட்ஸ் ஆகிய நோய்களிலிருந்து குறித்த நபர் குணமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. ஸ்டெம் செல் மற்றும் போன் மெரோவ் சிகிச்சைகளின் மூலம் குறித்த நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். எச்.ஐ.வீ. கிருமிக்கு எதிராக போராடக் கூடிய நோய் எதிர்ப்பு சக்தியுடைய நபர் ஒருவரின் போன் மெரேவ் இதற்காக பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. எச்.ஐ.வீ. தொற்றிய நபர் ஒருவர் முழுமையாக சுகப்படுத்தப்பட்ட சந்தர்ப்பமாக இதனை கருதுவதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். எவ்வாறெனினும், சிகிச்சைகளின் போது குறித்த நபர் பல்வேறு பக்க விளைவுகளை எதிர்நோக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Thursday, December 9, 2010

அரசியலில் இறங்கிவிட்டேனா? - விஜய் ஆவேசம்



‘காவலன்’ படத்துக்காக தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்கத்தோடு மோதி வருகிறார் இளையதளபதி விஜய்.

தமிழ் சினிமாவை உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்லும் டைரக்டர் ஷங்கரின் இயக்கத்தில் ‘3 இடியட்ஸ்’ படத்தில் நடிப்பதை பெருமையாக கருதுகிறாராம்.

ஆனால் இந்தப்படம் தொடர்பாக தயாரிப்பாளர் பக்கமிருந்து எந்தவித தகவலும் இதுவரை வராத காரணத்தால் வருத்தமடைந்தாரம்.

‘காவலன்’ படத்தின் பாடல்கள் வித்யாசாகரின் இசையில் ரசிக்கும்படியாகவே வந்துள்ளதாம்.

‘காவலன்’ மாதிரி பெரிய படத்துக்கு எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்குமோ,அது மாதிரி ஆங்காங்கே ஒரு பக்கம் எதிர்ப்பும் இருக்கிறது. ஆகவே பரபரப்பு கிளம்பும் என்று ஆவேசத்துடன் கூறுகிறார் இளைய தளபதி.

நீங்க அரசியலில் முழுமூச்சாக இறங்குவது உறுதியாகிவிட்டதா? என்ற கேள்விக்கு. தமிழ் சினிமாவின் மக்கள் செல்லவாக்கு உள்ள நடிகனாக இருப்பதில் பெருமை அடைகிறேன்.

நான் அரசியலில் இறங்குவது தொடர்பாக அடிக்கடி கிளம்பும் கற்பனை ஊற்று தகவல்களை என்னால் தடுக்க இயலாது, என்கிறார்

இரண்டு கோபக்காரர்களை இணைத்த படம்!


"களவாடிய பொழுதுகள்" படத்துக்காக பிரபு தேவா, படைப்பாளி தங்கர் பச்சான் இருவரும் இணைந்ததை இப்போதும் கோலிவுட்டில் ஆச்சர்யமாக பார்ப்பவர்கள் இருக்கிறார்கள்.

"களவாடிய பொழுதுகள்" படத்துக்காக பிரபு தேவா, படைப்பாளி தங்கர் பச்சான் இருவரும் இணைந்ததை இப்போதும் கோலிவுட்டில் ஆச்சர்யமாக பார்ப்பவர்கள் இருக்கிறார்கள்.

இரண்டு பேரும் கடுகடுவென எரிந்து விழுந்து கோபத்தை கொட்டுகிற பார்டிகளாம். 'தங்கரும் கோபக்காரர், நீங்களும் கோபக்காரர் எப்படி சேர்ந்து வேலை பார்த்தீர்கள்?'என்று பிரபுவிடம் கேட்டால், முதலில் இது உனக்கு சரி பட்டு வராது என்றார்கள்.

தங்கர் எதையும் படு 'ஹாட்டாக' விமர்சனம் செய்யக்கூடியவர் என்றாலும் எங்களுக்குள் நல்ல நட்பு இருந்தது.எத்தனையோ நடிகர்களை விட்டு என்னை 'செலக்ட்' பண்ணியது ஏன்? என்று அவரிடம் கேட்டேன்.

நீதான் கமர்சியல் நடிகர் என பெயர் எடுத்திருக்கே.அதான் உன்னை கூப்பிட்டேன் என்றார்.டான்ஸ், மசாலா,கலகலப்பு, ஜாலி இதையும் மீறி பிரபு தேவாவுக்குள் இன்னொரு 'பரிணாமம்'இருக்கு என்பதையும் காட்டியுள்ளார்.

அதையும் சொன்னபடி எடுத்துள்ளார். அருமையாக வந்துள்ளது. நிச்சயம் எனக்கு இது வித்தியாசமான அனுபவம்தான்.

எனக்கு இருக்கிற கமர்சியல் இமேஜ் எல்லாத்தையும் கழட்டி வெச்சுட்டு நடித்திருக்கேன்.அவர் சீரியசாக படம் எடுத்தாலும்,ஜாலியான மனிதர்.படப்பிடிப்பில் ஒரே ஜாலிதான்.

களவாடிய பொழுதுகள் சீரியசான படமாக இருந்தாலும் கமர்சியலாக வெற்றி பெறும்.தங்கர் பச்சானும் ஒரு நடிகர்தான்.

அவரை என் டைரக்சனில் நடிக்க வைத்து 'பெண்ட'நிமிர்த்தி வேலை வாங்க வேண்டும் என்பது என் விருப்பம்' என்கிறார் பிரபு தேவா

புயலில் தத்தளித்த படக்குழு


வரலாற்றை சினிமாவுக்காக திருப்பியும், புரட்டியும் போட்டு 'உருமி' படத்தை எடுத்து வருகிறார் அவார்டு பட படைப்பாளி "சந்தோஸ் சிவன்".

உருமி என்பது ஒரு வகையான ஆயுதம். பதினைந்தாம் நூற்றாண்டில் நடக்கும் கதையில் இந்திய இளசுகள், வாஸ்கோடா காமாவை தேடிப்போய் கொல்கிறார்களாம்.

ரொம்ப வேகமாக படத்தை எடுத்து முடித்துவிட்டார்களாம். சீரியசான விசயமுள்ள படத்தை இப்படி எடுத்ததால் படத்தில் நடித்த பிருதிவி ராஜ், பிரபு தேவா,ஜெனிலியா, நித்யா மேனன், தபு, வித்யா பாலன் ஆகியோருக்கு ஆச்சர்யம் அடங்கவில்லை.

மும்பைலிருந்து மால்ஷேகாட்ஸ் என்ற இடத்தில் சூட் பண்ணும் போது புயலில் சிக்கிய அனுபவத்தை பெற்றதாம் படக்குழு. அந்த காட்சியில் நடிக்கும் போது பிரபுதேவா ஆடிப்போனாராம்.

படத்துக்காக பணிபுரிந்தவர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை 'உருமி' தந்துள்ளது

Sunday, October 31, 2010

சூரியனை போல இருமடங்கு பெரிய நட்சத்திரம் கண்டுபிடிப்பு

சூரியனை போன்று இருமடங்கு பெரிய நியூட்ரான் (மின் இயக்கமற்ற) நட்சத்திரம் வான்வெளி கோளப்பாதையில் கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்து நாட்டின் தேசிய கதிரியக்க வான்கோள்கள் கண்காணிப்பு துறையின் விஞ்ஞானி பால் டெமோரெஸ்ட் கூறியதாவது:

சூரியனை போன்று இருமடங்கு பெரிய நியூட்ரான் நட்சத்திரம் கண்டறியப்பட்டுள்ளது. இது ஆச்சரியமாக உள்ளது. உயர் அடர்த்தி மற்றும் அணு இயற்பியல் தொடர்பான எங்களுடைய பல்வேறு விதிகளுக்கு பல்வேறு அர்த்தங்களை இந்த நட்சத்திர கண்டுபிடிப்பு அளித்துள்ளது. அணுக் கருவை விட, நியூட்ரான் நட்சத்திரம் பல மடங்கு அடர்த்தியானது.

இந்த நட்சத்திரத் தின் மூலப்பொருள் மட்டும் 5000 டன்னுக்கும் அதிகமான எடை கொண்டதாக இருக்கும். இது விண்வெளிக் கோளத்தில் சுற்றி வரும்போது இதிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுக்கள் விண்வெளியில் படும். இந்த கண்டுபிடிப்பு நியூட்ரான் நட்சத்திரங்கள் தொடர்பான ஆராய்ச்சியாளர்களின் விண்வெளி ஆராய்ச்சிக்கு புதிய வடிவத்தை கொடுத்துள்ளது என்றார்

Sunday, August 1, 2010

ஏனைய தொழிநுட்ப செய்தி தட்ப வெப்ப மாறுதல் காரணமாக 12 ஆண்டுகளில் பூமி நீரில் மூழ்கும் அபாயம்

பருவநிலை மாற்றம் காரணமாக உலகின் பல்வேறு பகுதிகளில் தட்ப வெப்ப நிலையில் மாறுதல் ஏற்பட்டு வருகிறது. பூமியில் ஏற்படும் மாசுகாரணமாக விண்வெளியில் கார்பனின் அளவு அதிகரித்து வருகிறது.

இதனால் வடக்கு மற்றும் தென் துருவங்களில் கடல் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் வழக்கத்தை விட அதிக அளவில் உருகுகின்றன. இதனால் கடலின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

இந்த நிலை தொடர்ந்தால் இன்னும் 12 ஆண்டுகளில் பூமியின் பெரும்பாலான பகுதிகள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும். இந்த தகவலை தாய்லாந்து சுற்றுச்சூழல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே கார்பன் உற்பத்தியை குறைத்து பூமியை காப்பாற்றும் பொறுப்பு மக்களிடம் தான் உள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்

Sunday, July 18, 2010

புன்னகை சிந்தும் மோனாலிசா ஓவிய ரகசியத்தை கண்டுபிடித்த பிரான்ஸ் விஞ்ஞானிகள்

எப்போதும் மாறாத புன்னகை சிந்தும் உலகப்புகழ் மிக்க மோனாலிசா ஓவியத்தை பிரான்ஸ் ஓவியர் லியோனார் டோ டா வின்சி என்பவர் வரைந்தார். புன்னகை பூக்கும் எழில்மிகு ஓவியத்தின் ரகசியம் குறித்து பலர் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஓவியர் லியோனார்டோ டா வின்சியின் ஓவியங்கள் பாரிஸ் நகரின் லூவர்அருங்காட்சியகத்தில் உள்ளது. அங்குள்ள மோனாலிசா உள்ளிட்ட 7 ஓவியங்களை விஞ்ஞானிகள் பிலிப்வால்டர் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு ஆய்வு செய்தனர்.

மோனாலிசா உள்ளிட்ட ஓவியங்கள் மீது எக்ஸ்ரே கதிர்களை பாய்ச்சி பரிசோதனை செய்தனர். அதில் மோனாலிசா ஓவியத்தை லியோனார்டோ டாவின்சி 30 அடுக்கு பெயிண்டிங் (வண்ணம்) செய்து இருப்பது தெரிய வந்தது.

மேலும் ஒவ்வொரு வண்ண கலவை அடுக்கு களும் 40 மைக்ரோ மீட்டர் அதாவது மனிதனின் மயிர் தடிமன் அளவுக்கு நுண்ணியமாக வரையப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது.

மேலும், மோனாலிசா ஓவியத்தில் மேங்கனிஷ் ஆக்சைடு என்ற ரசாயண கலவையின் மூலம் ஓவியர் டா வின்சி வரைந்துள்ளார். ஓவியம் பளபளப்பாக இருப்பதற்கு அதன் மீது அவர் காப்பர் உலோகத்தை பயன் படுத்தியுள்ளார்.

இந்த தகவலை விஞ்ஞானி பிலிப்வால்டர் தெரிவித்துள்ளார். ஓவியர் டாவின்சி பயன் படுத்திய தொழில் நுட்பத்துக்கு ”ஸ்பு மோடோ” என்று பெயர் என அவர் கூறினார்.

மோனாலிசா ஓவியத்தை டாவின்சி கடந்த 1503 -ம் ஆண்டு வரைய தொடங்கினார். புளோ ரென்டைனை சேர்ந்த வியாபாரி பிரான்சிஸ்கோ டெல்ஜியோகாண்டோ வின் மனைவி லிசா கெராந்தினி இந்த ஓவியத்துக்கு மாடலாக இருந்தார்.

Monday, July 12, 2010

மனித முகத்துடன் அதிசய மீன்!

பிரித்தானியாவின் Dagenham, Essex பகுதியில் மனித முகத்துடன் கூடிய மீன் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. சோகத்துடன் காணப்படும் மனிதன் ஒருவனின் முகம் போல் அதன் முகம் இருக்கின்றது.

44 வயதுடைய விவசாயி ஒருவர் இந்த மீனை சுமார் 05 மாதங்களுக்கு முன் வளர்ப்பதற்காக வாங்கியபோது அதன் தோற்றம் சாதாரணமாகத்தான் இருந்திருக்கிறது.

ஆனால் அண்மைய வாரங்களில் அதன் முகம் மனித முகம் போல் மாறி உள்ளது.வாய், மூக்கு, கண் என்று மனித உறுப்புகள் அதில் வளர்ச்சி கண்டுள்ளன.

இந்த அதிசய மீனை 40,000 அமெரிக்க டொலர் வரை விலை கொடுத்து வாங்க ஆர்வலர்கள் தயாராக உள்ளனர்.

Monday, June 21, 2010

சீனப் பெருஞ்சுவரின் உறுதி தன்மைக்கான காரணம்.


சீனப் பெருஞ்சுவரின் உறுதி தன்மைக்கு, அரிசி கஞ்சியால் உருவாக்கப்பட்ட சாந்து கலவையே காரணமென விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்றாக, சீனப் பெருஞ்சுவர் கருதப்படுகிறது. இந்த நீண்ட சுவர் கட்டப்பட்டு, 1,500 ஆண்டுகளை கடந்துவிட்டாலும், இயற்கை சீற்றங்களையெல்லாம் எதிர்த்து இன்றும் உறுதியுடன் உள்ளது. இது தொடர்பாக, பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சீஜியாங் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில், சீனப் பெருஞ்சுவரின் உறுதி தன்மைக்கு, அரிசி கஞ்சி, சுண்ணாம்பு மற்றும் சுண்ணாம்புக்கல் கலந்த சாந்து பொருள் தான் காரணமென தெரிய வந்துள்ளது.இது தொடர்பாக விஞ்ஞானிகள் கூறியதாவது:பழங்கால சீன கட்டட கலைக்கு சான்றாக, சீனப் பெருஞ்சுவர் விளங்குகிறது. இந்த சுவர் கட்டப்பட்டு, 1,500 ஆண்டுகளை கடந்துவிட்டாலும், அதே உறுதியுடன் இருப்பதற்கு, அரிசி கஞ்சியுடன், சுண்ணாம்பு, சுண்ணாம்புக்கல் உள்ளிட்ட பொருட்களை கொண்டு, உருவாக்கப்பட்ட கலவையால், கற்களை இணைத்துள்ளது தான் காரணம்.

இந்த கலவையில், தாவர பொருட்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. உயிரற்ற பொருளான சுண்ணாம்பில், கால்சியம் கார்பனேட் உள்ளது. தாவரத்திலிருந்து எடுக்கப்படும் அரிசி கஞ்சியில், “அமிலோபெக்டின்’ என்ற மாவுச்சத்து உள்ளது.சுண்ணாம்பு மற்றும் அரிசி கஞ்சி உள்ளிட்ட பொருட்களை கலந்து கலவை உருவாக்கும்போது, அரிசி கஞ்சியில் உள்ள “அமிலோபெக்டின்’ கலவைக்கு ஒட்டும் தன்மையை கொடுக்கிறது. இந்த கலவையை, கற்களுக்கு இடையில் வைத்து கட்டும்போது, அந்த சுவர் மிகவும் உறுதியாக மாறுகிறது. மேலும், சுவர்களில், விரிசல் ஏற்படாமலும், அதில் காளான், பூஞ்சை போன்றவை ஏற்படாமலும் சுவரை பாதுகாக்கிறது.

இந்த கலவையை கொண்டுதான், சீனப்பெருஞ்சுவரும், அதில் உள்ள கண்காணிப்பு கோபுரங்களும் கட்டப்பட்டுள்ளன. இது கட்டப்பட்ட பின், பல்வேறு போர்களை சந்தித்துள்ளது. பீரங்கி உள்ளிட்ட ஆயுதங்களால், இதை உடைக்கும் முயற்சிகள் எல்லாம் தோற்றன.மேலும் நிலநடுக்கம் போன்ற பல்வேறு இயற்கை சீற்றங்களையும் தாங்கி, அதே உறுதியுடன் இந்த சுவர் நீடித்து நிற்கிறது.பழங்கால கட்டடக்கலை வல்லுனர்கள், எத்தகைய பொருட்களை பயன்படுத்தினர் என்பது குறித்த முழுமையான விவரங்கள் கிடைக்குமா என்பது தெரியாது. இருப்பினும் தொடர்ந்து எங்கள் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளோம். இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினர்.

கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாத நோய்


இளம்பிள்ளை வாதம் என்கின்ற போலியோவை உலகத்தை விட்டே விரட்ட வேண்டும் என்பதே உலக மருத்துவர்களின் ஆவல். பொதுவாக குழந்தைகளுக்கு வரும் காய்ச்சலில் பலவகையுண்டு.

இதில் குழந்தையின் வயிற்றில் அஜ“ரணக் கோளாறு உருவாகி புளிப்புத் தன்மை ஏற்பட்டுவிடும். இதனால் உடல் அலர்ஜி ஆகி சளிபிடித்து காய்ச்சல் உருவாகும். இந்த காய்ச்சலானது 3 முதல் 8 நாட்கள் வரை தொடர்ந்து இருக்கும். நாளுக்கு நாள் காய்ச்சலின் வேகம் அதிகரித்து நரம்பு மண்டலங்களைத் தாக்கும். அப்போது குழந்தைகளின் ஈரல் பாதிக்கப்படும். ஈரல் பாதிப்பால் மலச்சிக்கல் உருவாகும். இந்த மலச்சிக்கலால் வயிற்றில் வாயுக்கள் மற்றமடையும். இதனால் அருகு பற்றி வர்மம் (அருகு பற்றி வர்மம் என்பது இடுப்புப் பகுதியில் விசை நரம்பு என்ற வில்விசை நரம்பு சேரும் இடம்) பாதிக்கப்படும். விசை நரம்பு என்பது இடுப்புப் பகுதியில் இருந்து முதுகு வழியாக கழுத்துப் பகுதியில் கத்திரிக்கோல் மாறாக தலையின் பின்புறம் முகுளம் பகுதியில் சேரும் நரம்பாகும். ஈரல் பாதிப்பால் அருகு பற்றி வர்மம் பாதிக்கப்பட்டு விசை நரம்பு உலர்ந்து முறுகும் தன்மையடையும். இதனால் குழந்தையின் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும்.

முதலில் சளி உருவாகி காய்ச்சலாக மாறி மலச்சிக்கல் ஏற்பட்டு விசை நரம்பு பாதிக்கப்பட்டு இடுப்புப் பகுதி செயலிழந்து காய்ச்சலின் தன்மை கடுமையாகும். இதை அகத்தியர் வாத தன்மை கொண்டது என்கிறார். இதற்கு சுரவாதம் எனவும் பெயரிட்டுள்ளார்.

சுரவாத காய்ச்சலுக்கான அறிகுறிகள்:

* குழந்தை எப்போதும் அழுதுகொண்டே இருக்கும்.

* மலச்சிக்கல் உருவாகும்.

* 3 நாள் முதல் 8 நாள் வரை காய்ச்சல் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

காய்ச்சலின் வேகம் அதிகரிப்பதால் இடுப்புப் பகுதி செயலிழந்துவிடுகிறது. வாதத்தில் அதிகம் பாதிக்கப்படும் வாதம் சுரவாதம் என்பதால் இதனை முதலில் வைத்துள்ளனர். இந்த சுரவாதமானது தாயின் வயிற்றில் கரு உற்பத்தியாகும்போதும், 10 மாதம் அதாவது 300 நாட்கள் வயிற்றில் வளரும்போதும் அந்த தாய்க்கு மன அழுத்தம், மனக்கவலை, மன உளைச்சல், திடீர் அதிர்ச்சி, பயம், காமம், கோபம் போன்றவற்றால் உடலில் உள்ள தச வாயுக்கள் பாதிப்படைகின்றன.

தாய்க்கு மலச்சிக்கல், அஜ“ரணக் கோளா

று, வாயுத் தொல்லை இருந்தால்கூட குழந்தை பிறந்த பிறகும் இந்த சுரவாத நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. இளம்பிள்ளை வாதம் என்பது உலகையே ஆட்கொள்ளும் கொடிய நோயாகும். குழந்தை தொப்புள் கொடி சுற்றி பிறப்பதும் இந்த பாதிப்பால்தான். அறுவை சிகிச்சை செய்து குழந்தை எடுப்பதும் இத்தகைய பாதிப்பால்தான். அளவுக்கு அதிகமான கால்சியம், இரும்பு, வைட்டமின் மாத்திரைகளை சாப்பிடுவதால் தாயின் குடலில் புண் ஏற்பட்டு அதனால் குழந்தைக்கு பாதிப்பு எற்படுகின்றது. ஈரத்தலையுடன் பால் கொடுப்பதால் சுரவாதம் ஏற்பட வாய்ப்பாகிறது. பொதுவாக இந்த நோயானது கருவிலிருக்கும் போது இருக்கும். குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் அருந்தும்போது தாய்க்கு உடலில் நோய் தாக்கினால் அது பாலின் வழியாக குழந்தைக்கு சென்று தாக்கும்போது சுரவாதத்தின் தன்மை வெளிப்படும். அதிமதுரம் - 5 கிராம், நற்žரகம் - 5 கிராம், ஜடமாஞ்சி - 5 கிராம், சாரணைவேர் - 5 கிராம், வில்வவேர் - 5 கிராம், முடக்கத்தான் - 5 கிராம், குறுந்தொட்டி - 5 கிராம் இவற்றை இடித்து சலித்து 1 லிட்டர் தண் ரில் கொதிக்க வைத்து 200 மிலி ஆகும் பக்குவம் வரை காய்ச்சி பின் இளநீர் விட்டு மீண்டும் சிறிதுநேரம் கொதிக்க வைத்து ஆறிய பின்பு வடிகட்டி காலை அல்லது மாலை ஒருவேளை மட்டும் 1/2 டம்ளர் வீதம் அருந்தி வர வேண்டும். கசப்புத் தன்மை இருக்காது. இந்த கஷாயத்தை கர்ப்பமான நான்காவது மாதத்திலிருந்து குழந்தை பிறக்கும்வரை அருந்தி வந்தால் குழந்தைக்கு எந்தவிதமான வாத நோயும் தாக்காது.

வரும்முன் காக்க:

கருவில் குழந்தை வளரும்போது தாய்க்கு எந்தவிதமான மன அழுத்தம், மன உளைச்சல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாத நோய்


இளம்பிள்ளை வாதம் என்கின்ற போலியோவை உலகத்தை விட்டே விரட்ட வேண்டும் என்பதே உலக மருத்துவர்களின் ஆவல். பொதுவாக குழந்தைகளுக்கு வரும் காய்ச்சலில் பலவகையுண்டு.

இதில் குழந்தையின் வயிற்றில் அஜ“ரணக் கோளாறு உருவாகி புளிப்புத் தன்மை ஏற்பட்டுவிடும். இதனால் உடல் அலர்ஜி ஆகி சளிபிடித்து காய்ச்சல் உருவாகும். இந்த காய்ச்சலானது 3 முதல் 8 நாட்கள் வரை தொடர்ந்து இருக்கும். நாளுக்கு நாள் காய்ச்சலின் வேகம் அதிகரித்து நரம்பு மண்டலங்களைத் தாக்கும். அப்போது குழந்தைகளின் ஈரல் பாதிக்கப்படும். ஈரல் பாதிப்பால் மலச்சிக்கல் உருவாகும். இந்த மலச்சிக்கலால் வயிற்றில் வாயுக்கள் மற்றமடையும். இதனால் அருகு பற்றி வர்மம் (அருகு பற்றி வர்மம் என்பது இடுப்புப் பகுதியில் விசை நரம்பு என்ற வில்விசை நரம்பு சேரும் இடம்) பாதிக்கப்படும். விசை நரம்பு என்பது இடுப்புப் பகுதியில் இருந்து முதுகு வழியாக கழுத்துப் பகுதியில் கத்திரிக்கோல் மாறாக தலையின் பின்புறம் முகுளம் பகுதியில் சேரும் நரம்பாகும். ஈரல் பாதிப்பால் அருகு பற்றி வர்மம் பாதிக்கப்பட்டு விசை நரம்பு உலர்ந்து முறுகும் தன்மையடையும். இதனால் குழந்தையின் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும்.

முதலில் சளி உருவாகி காய்ச்சலாக மாறி மலச்சிக்கல் ஏற்பட்டு விசை நரம்பு பாதிக்கப்பட்டு இடுப்புப் பகுதி செயலிழந்து காய்ச்சலின் தன்மை கடுமையாகும். இதை அகத்தியர் வாத தன்மை கொண்டது என்கிறார். இதற்கு சுரவாதம் எனவும் பெயரிட்டுள்ளார்.

சுரவாத காய்ச்சலுக்கான அறிகுறிகள்:

* குழந்தை எப்போதும் அழுதுகொண்டே இருக்கும்.

* மலச்சிக்கல் உருவாகும்.

* 3 நாள் முதல் 8 நாள் வரை காய்ச்சல் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

காய்ச்சலின் வேகம் அதிகரிப்பதால் இடுப்புப் பகுதி செயலிழந்துவிடுகிறது. வாதத்தில் அதிகம் பாதிக்கப்படும் வாதம் சுரவாதம் என்பதால் இதனை முதலில் வைத்துள்ளனர். இந்த சுரவாதமானது தாயின் வயிற்றில் கரு உற்பத்தியாகும்போதும், 10 மாதம் அதாவது 300 நாட்கள் வயிற்றில் வளரும்போதும் அந்த தாய்க்கு மன அழுத்தம், மனக்கவலை, மன உளைச்சல், திடீர் அதிர்ச்சி, பயம், காமம், கோபம் போன்றவற்றால் உடலில் உள்ள தச வாயுக்கள் பாதிப்படைகின்றன.

தாய்க்கு மலச்சிக்கல், அஜ“ரணக் கோளா

று, வாயுத் தொல்லை இருந்தால்கூட குழந்தை பிறந்த பிறகும் இந்த சுரவாத நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. இளம்பிள்ளை வாதம் என்பது உலகையே ஆட்கொள்ளும் கொடிய நோயாகும். குழந்தை தொப்புள் கொடி சுற்றி பிறப்பதும் இந்த பாதிப்பால்தான். அறுவை சிகிச்சை செய்து குழந்தை எடுப்பதும் இத்தகைய பாதிப்பால்தான். அளவுக்கு அதிகமான கால்சியம், இரும்பு, வைட்டமின் மாத்திரைகளை சாப்பிடுவதால் தாயின் குடலில் புண் ஏற்பட்டு அதனால் குழந்தைக்கு பாதிப்பு எற்படுகின்றது. ஈரத்தலையுடன் பால் கொடுப்பதால் சுரவாதம் ஏற்பட வாய்ப்பாகிறது. பொதுவாக இந்த நோயானது கருவிலிருக்கும் போது இருக்கும். குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் அருந்தும்போது தாய்க்கு உடலில் நோய் தாக்கினால் அது பாலின் வழியாக குழந்தைக்கு சென்று தாக்கும்போது சுரவாதத்தின் தன்மை வெளிப்படும். அதிமதுரம் - 5 கிராம், நற்žரகம் - 5 கிராம், ஜடமாஞ்சி - 5 கிராம், சாரணைவேர் - 5 கிராம், வில்வவேர் - 5 கிராம், முடக்கத்தான் - 5 கிராம், குறுந்தொட்டி - 5 கிராம் இவற்றை இடித்து சலித்து 1 லிட்டர் தண் ரில் கொதிக்க வைத்து 200 மிலி ஆகும் பக்குவம் வரை காய்ச்சி பின் இளநீர் விட்டு மீண்டும் சிறிதுநேரம் கொதிக்க வைத்து ஆறிய பின்பு வடிகட்டி காலை அல்லது மாலை ஒருவேளை மட்டும் 1/2 டம்ளர் வீதம் அருந்தி வர வேண்டும். கசப்புத் தன்மை இருக்காது. இந்த கஷாயத்தை கர்ப்பமான நான்காவது மாதத்திலிருந்து குழந்தை பிறக்கும்வரை அருந்தி வந்தால் குழந்தைக்கு எந்தவிதமான வாத நோயும் தாக்காது.

வரும்முன் காக்க:

கருவில் குழந்தை வளரும்போது தாய்க்கு எந்தவிதமான மன அழுத்தம், மன உளைச்சல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாத நோய்


இளம்பிள்ளை வாதம் என்கின்ற போலியோவை உலகத்தை விட்டே விரட்ட வேண்டும் என்பதே உலக மருத்துவர்களின் ஆவல். பொதுவாக குழந்தைகளுக்கு வரும் காய்ச்சலில் பலவகையுண்டு.

இதில் குழந்தையின் வயிற்றில் அஜ“ரணக் கோளாறு உருவாகி புளிப்புத் தன்மை ஏற்பட்டுவிடும். இதனால் உடல் அலர்ஜி ஆகி சளிபிடித்து காய்ச்சல் உருவாகும். இந்த காய்ச்சலானது 3 முதல் 8 நாட்கள் வரை தொடர்ந்து இருக்கும். நாளுக்கு நாள் காய்ச்சலின் வேகம் அதிகரித்து நரம்பு மண்டலங்களைத் தாக்கும். அப்போது குழந்தைகளின் ஈரல் பாதிக்கப்படும். ஈரல் பாதிப்பால் மலச்சிக்கல் உருவாகும். இந்த மலச்சிக்கலால் வயிற்றில் வாயுக்கள் மற்றமடையும். இதனால் அருகு பற்றி வர்மம் (அருகு பற்றி வர்மம் என்பது இடுப்புப் பகுதியில் விசை நரம்பு என்ற வில்விசை நரம்பு சேரும் இடம்) பாதிக்கப்படும். விசை நரம்பு என்பது இடுப்புப் பகுதியில் இருந்து முதுகு வழியாக கழுத்துப் பகுதியில் கத்திரிக்கோல் மாறாக தலையின் பின்புறம் முகுளம் பகுதியில் சேரும் நரம்பாகும். ஈரல் பாதிப்பால் அருகு பற்றி வர்மம் பாதிக்கப்பட்டு விசை நரம்பு உலர்ந்து முறுகும் தன்மையடையும். இதனால் குழந்தையின் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும்.

முதலில் சளி உருவாகி காய்ச்சலாக மாறி மலச்சிக்கல் ஏற்பட்டு விசை நரம்பு பாதிக்கப்பட்டு இடுப்புப் பகுதி செயலிழந்து காய்ச்சலின் தன்மை கடுமையாகும். இதை அகத்தியர் வாத தன்மை கொண்டது என்கிறார். இதற்கு சுரவாதம் எனவும் பெயரிட்டுள்ளார்.

சுரவாத காய்ச்சலுக்கான அறிகுறிகள்:

* குழந்தை எப்போதும் அழுதுகொண்டே இருக்கும்.

* மலச்சிக்கல் உருவாகும்.

* 3 நாள் முதல் 8 நாள் வரை காய்ச்சல் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

காய்ச்சலின் வேகம் அதிகரிப்பதால் இடுப்புப் பகுதி செயலிழந்துவிடுகிறது. வாதத்தில் அதிகம் பாதிக்கப்படும் வாதம் சுரவாதம் என்பதால் இதனை முதலில் வைத்துள்ளனர். இந்த சுரவாதமானது தாயின் வயிற்றில் கரு உற்பத்தியாகும்போதும், 10 மாதம் அதாவது 300 நாட்கள் வயிற்றில் வளரும்போதும் அந்த தாய்க்கு மன அழுத்தம், மனக்கவலை, மன உளைச்சல், திடீர் அதிர்ச்சி, பயம், காமம், கோபம் போன்றவற்றால் உடலில் உள்ள தச வாயுக்கள் பாதிப்படைகின்றன.

தாய்க்கு மலச்சிக்கல், அஜ“ரணக் கோளா

று, வாயுத் தொல்லை இருந்தால்கூட குழந்தை பிறந்த பிறகும் இந்த சுரவாத நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. இளம்பிள்ளை வாதம் என்பது உலகையே ஆட்கொள்ளும் கொடிய நோயாகும். குழந்தை தொப்புள் கொடி சுற்றி பிறப்பதும் இந்த பாதிப்பால்தான். அறுவை சிகிச்சை செய்து குழந்தை எடுப்பதும் இத்தகைய பாதிப்பால்தான். அளவுக்கு அதிகமான கால்சியம், இரும்பு, வைட்டமின் மாத்திரைகளை சாப்பிடுவதால் தாயின் குடலில் புண் ஏற்பட்டு அதனால் குழந்தைக்கு பாதிப்பு எற்படுகின்றது. ஈரத்தலையுடன் பால் கொடுப்பதால் சுரவாதம் ஏற்பட வாய்ப்பாகிறது. பொதுவாக இந்த நோயானது கருவிலிருக்கும் போது இருக்கும். குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் அருந்தும்போது தாய்க்கு உடலில் நோய் தாக்கினால் அது பாலின் வழியாக குழந்தைக்கு சென்று தாக்கும்போது சுரவாதத்தின் தன்மை வெளிப்படும். அதிமதுரம் - 5 கிராம், நற்žரகம் - 5 கிராம், ஜடமாஞ்சி - 5 கிராம், சாரணைவேர் - 5 கிராம், வில்வவேர் - 5 கிராம், முடக்கத்தான் - 5 கிராம், குறுந்தொட்டி - 5 கிராம் இவற்றை இடித்து சலித்து 1 லிட்டர் தண் ரில் கொதிக்க வைத்து 200 மிலி ஆகும் பக்குவம் வரை காய்ச்சி பின் இளநீர் விட்டு மீண்டும் சிறிதுநேரம் கொதிக்க வைத்து ஆறிய பின்பு வடிகட்டி காலை அல்லது மாலை ஒருவேளை மட்டும் 1/2 டம்ளர் வீதம் அருந்தி வர வேண்டும். கசப்புத் தன்மை இருக்காது. இந்த கஷாயத்தை கர்ப்பமான நான்காவது மாதத்திலிருந்து குழந்தை பிறக்கும்வரை அருந்தி வந்தால் குழந்தைக்கு எந்தவிதமான வாத நோயும் தாக்காது.

வரும்முன் காக்க:

கருவில் குழந்தை வளரும்போது தாய்க்கு எந்தவிதமான மன அழுத்தம், மன உளைச்சல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

Sunday, May 30, 2010

குழந்தைகள் அம்மாவை தேடுவது ஏன்?

குழந்தைகள் தாயிடம் அதிக பாசம் காட்டுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். சில குழந்தைகள் அழுவதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அம்மாவை பார்த்தாலே உடனே அழுகையை நிறுத்திவிடும்.

பிறந்து சில மாதங்களில் ஆட்களைப் பார்த்து இனம் காணத் தெரியாத பொழுதே தன் தாயினை குழந்தை நன்றாக அடையாளம் தெரிந்து வைத்திருக்கும். தாயின் அரவணைப் பிற்குப் பிறகே சமாதானம் அடையும். இல்லாவிட்டால் காரணமே இல்லாமல் அழுவதை நாம் பார்க்கலாம்.
ஆனால் இதுபோன்ற பாசத்தை தந்தையுடன் குழந்தை வெளிப்படுத்துவது கிடையாது. தாய்- குழந்தைக்கு மட்டும் அப்படி என்ன பிணைப்பிருக்கிறது? என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தனர். அதற்கான விடை கிடைத்துவிட்டது. நியூயார்க் மாகாணத்தைச் சேர்ந்த மவுன்ட் சினாய் மருத்துவ மைய ஆய்வாளர்கள் இதை கண்டுபிடித்துள்ளனர்.

`ஆக்சிடாக்சின்’ என்னும் ஒருவித ஹார்மோன்கள் பெண்களின் உடலில் காணப்படுகின்றன. இவைதான் தாய்- குழந்தையின் பிணைப்பை தூண்டுகிறது. அதுமட்டுமல்லாமல் வேறு சில பணிகளிலும் இந்த ஹார்மோன்கள் பணியாற்றுகிறது. தாய்க்கு, பாலூட்டும் உணர்ச்சியை அதிகமாக்குவது, உடல் உழைப்பை தூண்டுவது, குழந்தைகளை தாயின் அருகாமையை எதிர்பார்த்து காத்திருக்க வைப்பது போன்ற பணிகளில் ஆக்சிடாக்சின் பங்கேற்கிறது.


பாச அரவணைப்பான `கட்டிப்புடி’ வைத்தியத்தில் தூண்டப்படுவது இந்த ஹார்மோன்கள்தான்!

நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) என்றால் என்ன?

நாம் உள்வாங்கும் மூச்சுக்காற்று, அருந்தும் தண்ணீர், உண்ணும் உணவு, தோலில் ஏற்படும் வெடிப்பு இப்படி அனைத்தின் வழியாகவும் நோயை விளைவிக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள், நுண் கிருமிகள் போன்றவை நமது உடலுக்குள் எப்போதும் நுழையத் தயாராகவே உள்ளன.

ஆனால் இவை அனைத்தையும் நம் உடலுக்குள் நுழைய முடியாமல் தடுக்கும் அற்புத சக்தி ஒன்று நம் உடலுக்கு உள்ளது. அதனையே நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) என்கிறோம்.

எதிர்ப்பு சக்தி வகைகள்:நமது உடலில், இயற்கையான எதிர்ப்பு சக்தி (Innate Immunity), தகவமைக்கப்படும் எதிர்ப்பு சக்தி (Adaptive Immunity),

உடன்பாட்டு எதிர்ப்பு சக்தி (Passive Immunity)

என மூன்று வகை எதிர்ப்பு சக்திகள் உள்ளன. இந்த மூன்று எதிர்ப்பு சக்திகள் பற்றி இப்போது தெரிந்துகொள்வோம்.

இயற்கையான எதிர்ப்பு சக்தி (Innate Immunity)

இந்த எதிர்ப்பு சக்தி, பிறக்கும்போதே ஒருவரது உடலில் அமைவது. மனித உடலுக்கு தோல், (Skin) எப்படி ஒரு மிகப்பெரிய தடுப்பு சுவர் போல் உள்ளதோ, அதைப் போலவே மூக்கு, தொண்டை மற்றும் உணவு செல்லும் பாதை போன்ற பகுதிகளில் உள்ளே உள்ள சவ்வுகளும் தடுப்புக் கவசம் போல் செயல் படுகின்றன. இந்த கவசங்கள் நம்மை நோய் கிருமிகளிடம் இருந்து காப்பாற்றக்கூடியவை.

அடுத்தபடியாக உடலுக்குள் நுழையும் நோய்த் தொற்றுக் கிருமிகளை தாக்கி அழிக்கக் கூடியவைகளான வெள்ளை அணுக்கள் (Neutrophils, Bosophils, Eosinophils) தூங்காத படை வீரனைப் போல் நம் உடலுக்குள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்திகளாகும்.

தகவமைக்கப்படும் எதிர்ப்பு சக்த (Adaptive Immunity)இரண்டாவது வகையான தகவமைக்கப்படும் எதிர்ப்பு சக்தி, நம்முடைய உடல் தன்னை நோய்க் கிருமிகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக, தாக்கும் நோய்களுக்குக் காரணமான ஒவ்வொரு பாக்டீரியாக்களுக்குத் தகுந்தவாறு வேறுபட்ட நோய் எதிர்ப்புத் தன்மையை உருவாக்கும். இந்த நோய் எதிர்ப்பு சக்தியில் முக்கிய பங்கு வகிப்பது Lymphocytes என்ற ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள்.

உடன்பாட்டு எதிர்ப்பு சக்தி (Passive Immunity)மூன்றாவது வகையான உடன்பாட்டு எதிர்ப்பு சக்தி என்பது தேவைப்படும்போது, இன்னொரு இடத்திலிருந்து எதிர்ப்பு சக்தியை தற்காலிகமாக பெறுதல். உதாரணமாக, தாய்ப்பால் அருந்தும் குழந்தைக்கு தாய்ப்பாலில் இத்தகைய நோய் எதிர்ப்பு சக்தி தற்காலிகமாக கிடைக்கிறது. மஞ்சள் காமாலை நோய் எதிர்ப்பு மருந்து மற்றும் டெட்டானஸ் நோய் எதிர்ப்பு மருந்துகள் இந்த நோய்கள் வராமல் தடுக்க வைக்கும்.

எதிர்ப்பு சக்தி எவ்வாறு செயல்படுகிறது?நோய்க் கிருமிகள் நுழையும்போது, அதனை எதிர்த்து போரிடுவதற்கான நுட்பமான கட்டமைப்பு நமது உடலில் செயல்படுகிறது. இந்த செயல்பாட்டின்போது உயிரணுக்கள், திசுக்கள், நுண்ணுயிரிகள் அனைத்தும் பரஸ்பர ஒத்துழைப்போடு விரைந்து செயல்படுகின்றன. நாளமில்லா சுரப்பிகள், மண்ணீரல், எலும்புகளின் அடியில் உள்ள மஜ்ஜை ஆகிய உறுப்புகள் இந்த செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள், பாதுகாப்பு அரணாக செயல்படுகின்றன. வெவ்வேறு வகையான வேதிப் பொருள்களும், சுரப்பிகளும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் உறுதுணையாக இருக்கின்றன. இவை ரத்தம் மற்றும் நிணநீர் வழியாக பயணித்து, நோய்க்குக் காரணமான கிருமிகளை அழிக்கின்றன.

நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி 24 மணி நேரமும் செயல்படுகிறது. அதன் பெரும்பாலான செயல்பாடுகள் நம்மை அறியாமலே நிகழ்கின்றன. சில நேரங்களில் நோய்க்கிருமிகளை எதிர்க்க முடியாமல், எதிர்ப்பு சக்தி தோல்வியடையும் போதுதான் அதன் அறிகுறிகள் நமக்குத் தெரியத் தொடங்குகின்றன. காய்ச்சல், சளி, மூக்கில் நீர் ஒழுகுதல் இவையெல்லாம் நோயை எதிர்த்து நம் உடல் போராடுகிறது என்பதற்கான அடையாளங்களே ஆகும். அப்போது ஏற்படும் அதிகபட்ச வெப்பநிலைதான் காய்ச்சலாக உணரப்படுகிறது. சளியின் வழியாக கிருமிகள் அப்போது வெளியேற்றப் படுகின்றன.

புண், கட்டி, ரணம் போன்றவை ஏற்படும்போது அந்தப் பகுதியில் நோயை எதிர்ப்பதற்கான செல்கள் அதிக அளவில் வந்து குவிகின்றன. இவை, அந்த புண்ணின் வழியாக கிருமிகள் தொற்றுவதைத் தடுக்கின்றன.

வெள்ளை அணுக்களில் (Neutrophils, Bosophils, Eosinophils ), ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் நோய்க்கிருமிகளை எதிர்த்து போராடுகின்றன.

நோய் எப்போது ஏற்படுகிறது?உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது நோய்க் கிருமிகள் எளிதில் தொற்றிக் கொள்கின்றன. ஊட்டச்சத்துக் குறைவினாலும் நோய் ஏற்படுகின்றன.

நம் உடலில் நோய் எதிர்க்கும் திறன் குறைவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அவற்றில் சில:

1. பலகீனமான உடலமைப்பு

2. மன அழுத்தத்தைக் கொடுக்கும் வேலைகள்

3. அலர்ஜி ஏற்படுத்தக்கூடிய சூழலில் வாழ்வது

4. மது, போதைப்பொருள் பழக்கம்

5. புகைப்பழக்கம்

6. தூக்கமின்மை

7. சர்க்கரை நோய் , இவை அனைத்தும் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தி நோய் எதிர்ப்பாற்றலை இல்லாமல் செய்கிறது.

நோய் தொற்றைத் தவிர்க்கசாக்கடை, கழிவு நீர் தேங்குதல், சாலையோரத்தில் கொட்டப்படும் காய்கறி மற்றும் வீட்டு உபயோகக் கழிவுகள் ஆகியவற்றின் மூலம் எளிதாக நோய்க் கிருமிகள் உருவாகி நம்மைத் தாக்குகின்றன. அதனால் நாம் தங்குமிடத்தை சுகாதாரமாக வைத்திருந்து நோய்த் தொற்றைத் தவிர்க்க வேண்டும்.

கை குலுக்குதல், தொலைபேசி உபயோகித்தல், கதவின் கைப்பிடியை தொடுதல், வாய், மூக்கை கையால் தொடுதல் இவற்றின் மூலம் கிருமிகள் தொற்ற வாய்ப்புள்ளது. இந்த ஒவ்வொரு செயல்பாட்டிற்குப் பின்னரும் கைகளை சோப்பு அல்லது வெந்நீர் கொண்டு சுத்தமாக கழுவ வேண்டும்.
கையுறைகள் போன்றவற்றை அணியும்முன் அவை முறையாக சுத்தப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

புகை பிடிக்கும் பழக்ம் உள்ளவர்கள் அதனை தவிர்க்க வேண்டும். அது உங்களை மட்டுமின்றி உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் பாதிக்கும்.
மன அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும். நெகிழ்வாகவும் மகிழ்ச்சியுடனும் இருக்க பழக வேண்டும். தவறாமல் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதனால் உடலில் உள்ள நச்சுத்தன்மை வெளியேற்றப்பட்டுஉடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

நோயற்ற வாழ்வுக்கு ஆழ்ந்த உறக்கம் அவசியமான ஒன்று. ஆழ்ந்த உறக்கம் கொள்ளும் போது நம் உடலில் உள்ள இறுக்கங்கள் மாறி நோய் எதிர்ப்புத் திறன் செயல்பட ஏதுவாகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பால், தயிர், நெய், சோயா பீன்ஸ் இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். முட்டையின் வெள்ளைக்கரு, மீன் இவற்றை வாரத்தில் மூன்று முறையாவது கட்டாயம் சாப்பிட வேண்டும்.

அனைத்து பழங்களும், காய்களும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியவை. இவற்றில் Anti oxidants அதிகமாக உள்ளது. கடலை, சூரியகாந்தி விதைகள் போன்றவை துத்தநாகம் கால்சியம் போன்ற எதிர்ப்பு சக்திக்கு ஆதாரமான சத்துக்களை அதிகரிக்க உதவும்.

வேதிப்பொருள்கள் (Chemicals), பூச்சி மருந்துகள் (Pesticidies) போன்றவை படிந்த பொருட்கள், மற்றும் வண்ணம் பூசப்பட்ட பொருட்கள், பதப்படுத்தப்பட்ட டின் பொருட்கள் போன்றவற்றை உண்பதை தவிர்க்க வேண்டும்.எண்ணெயில் வறுத்த உணவுப்பண்டங்களை உண்ணக் கூடாது. அவை உடலில் நச்சுத் தன்மையை (Free radicals) உண்டாக்குகிறது. சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். சர்க்கரையின் அளவு அதிகமானால் உடலில் நோய் எதிர்ப்புத் திறனை 15 மணி நேரத்திற்கு குறைத்துவிடுகிறது.

காபி, டீ இவற்றை அளவுக்கு மீறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அடிக்கடி காய்ச்சல், சளி போன்ற உபாதைகள் ஏற்படத் தொடங்கினால் மருத்துவரை அணுகி உடலை பரிசோதித்துக்கொள்ள வேண்டும். மருத்துவ பரிசோதனை மூலம் உடலுக்கு என்ன தேவை என்பதை மருத்துவர் மூலமாக அறிந்துகொள்ள முடியும்.

நோயில்லா பெருவாழ்வு வாழ நாம் செய்ய வேண்டியது, நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்க வேண்டும். அதற்கு சரியான நேரத்தில் சமச்சீர் உணவு (Balance diet) உண்டு நல்ல வாழ்வியல் பழக்கங்களோடு (Healthy life style) வாழ்வதே.

படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்?

படுக்கையில் சிறுநீர் கழிக்கும் நோயை ஆங்கிலத்தில் என்யூரிசிஸ் என்று மருத்துவர்கள் அழைக்கிறார்கள். குழந்தைகள் படுக்கை, உடைகள் அல்லது பொருத்தமற்ற இடங்களில் தன்னிச்சையாகவோ அல்லது அனிச்சையாகவோ சிறுநீர் கழித்துவிடுவதே இந்நோயாகும்.

அல்சீமர் என்னும் நோயோ அல்லது பிற வகையான மறதி நோயால் பாதிக்கப்பட்ட பெரியவர்களும் படுக்கை அல்லது உடைகளில் சிறுநீர் கழிக்கும் நோய் கொண்டுள்ளனர். பகலிலும் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளும் இருந்தாலும். பெரும்பாலும் இறவிலேயே படுக்கையில் சிறுநீர் கழிக்கும் இந்நோய் கிருஸ்து பிறப்பதற்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே காணப்படுகிறது. குழந்தை வளர வளர இந்நோய் தானாகவே சரியாகிவிடும். அல்லது சிகிச்சையின் மூலம் சரியாக்கி விடலாம். ஒரு சில குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை ஐந்தாறு மாதங்கள் நிறுத்தி பின் மீண்டும் தொடரும் வாய்ப்புகளும் உண்டு. பொதுவாக ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்தால் தான் அது பிரச்சனை. ஐந்து வயதுக்குற்பட்ட குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்தால் அது நோயல்ல. அது பற்றி கவலைப்பட தேவையில்லை.

படுக்கையில் சிறுநீர் கழிக்க குறிப்பிட்ட உடலியல் அல்லது உளவியல் காரணத்தை தனித்து கூற இயலாது. பல காரணிகள் கூட்டாக இந்நோயை தோற்றுவிக்கின்றன. இந்நோய் உள்ள ஒரு சில குழந்தைகளினால் சிறுநீரகமும், சிறுநீர் பையும் சற்றே பிறழ்வான செயல்பாடுகளை கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அதைப் போன்றே சிறுநீர்பை நிறைந்து விட்டதை சற்றே தாமதமாக உணர்ந்து கொள்ளும் நரம்பு மண்டலமும் இந்நோய்க்கு காரணமாக அமைகிறது. மேலும் பெற்றோர் சிறுவயதில் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் நோயை கொண்டிருந்ததும் குடும்பத்தில் யாரேனும் பிற உறுப்பினர்கள் இந்நோய் கொண்டிருந்ததும் தற்போது குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிக்க காரணமாக இருக்கலாம். குழந்தையின் மனதில் ஏதேனும் ஒரு மன அழுத்தத்தை உண்டாக்கக்கூடிய நிகழ்வு பதிந்திருப்பது படுக்கையில் சிறுநீர் கழிக்க காரணமாக அமைக்கிறது. பொதுவாக படுக்கையில் சிறுநீர் கழிப்பது வேறு ஏதோ ஒரு மனப்பிரச்சனையின் அறிகுறியாகும்.

படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகள் அவமானமும், பிறர் முன் தலைகுனிவும் கொள்வர், ஏணிப்படுக்கையில் படுப்பதையும் தவிர்ப்பர். தனித்திருத்தல், பிறருடனான பொருத்தப்பாட்டு பிரச்சனைகள், குறைவான தன்-மதிப்பு ஆகியவை படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளின் பிற உளவியல் பிரச்சனைகளாகும். எனவே இந்நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது அவசியமாகும்.

வெளிநாட்டில் இந்நோயை குணப்படுத்த அறிவியல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நவீன சிகிச்சைகள் அளிக்கின்றனர். குழந்தையின் உள்ளாடையில் ஓர் அல்ட்ரா சவுண்ட் கருவியை பொருத்திவிடுவர். இக்கருவி குழந்தையின் சிறுநீர்ப்பையின் அளவை கண்காணிக்கும். சிறுநீர்ப்பை முழு அளவை எட்டியவுடன் எச்சரிக்கை மணியை இக்கருவி எழுப்பும் உடனடியாக மணி சத்தம் கேட்ட குழந்தை எழுந்து சென்று சிறுநீர் கழித்து விட்டு வரலாம்.

இன்னொரு முறையில் குழந்தையின் உள்ளாடையில் எச்சரிக்கை மணியுடன் கூடிய பஞ்சடை (pad) வைக்கப்படும். எப்போதெல்லாம் இப்பஞ்சடை ஈரமாகிறதோ அப்போதெல்லாம் எச்சரிக்கை மணி ஒலிக்கும். உடனே குழந்தை எழுந்து சென்று சிறுநீர் கழித்து விட்டு வரும். நாளடைவில் மணி அடிக்காமலேயே எழுந்து சென்று சிறுநீர் கழிக்க குழந்தை கற்றுக் கொள்ளும்.

படுக்கையில் சிறுநீர் கழிப்பதை நிறுத்த பின்வரும் சில எளிமையான முறைகளை நாம் கையாளலாம்.

இரவில் கடிகாரத்தில் குறிப்பிட்ட நேர இடைவெளிக்கு எச்சரிக்கை மணி ஓசை எழுப்பச் செய்து, குழந்தையை விழிக்க வைத்து, கழிவறைக்குச் சென்று சிறுநீர் கழிக்க வைத்து விட்டு வரலாம். சில நாட்கள் இவ்வாறு செய்தால் விரைவில் குழந்தை தானாக எழுந்து சென்று சிறுநீர் கழிக்க பழகிக்கொள்ளும்.

குழந்தைகள் தூங்கப் போக சில மணி நேரம் இருக்கும்போது நீரோ அல்லது பிற திரவ உணவுகளையோ கொடுப்பதை தவிர்க்கவும்.

பெற்றோர் குறிப்பிட்ட இடைவெளியில் சில மணி நேரத்திற்கு ஒருமுறை குழந்தையை எழுப்பி “சிறுநீர் கழிக்க வேண்டுமா” என வினவலாம். ஆம் எனில் கழிவறைக்குச் சென்று சிறுநீர் கழித்துவிட்டு வர உதவலாம்.

சிறுநீர் எவ்வாறு கட்டுப்படுத்துவது என்ற முறைகளைப் பற்றிய விழிப்புணர்வை பெற்றோர் குழந்தைகளிடத்தில் ஏற்படுத்தலாம்.

குழந்தைகள் இரவில் படுக்கையிலும் உடைகளிலும் சிறுநீர் கழிக்காத சமயங்களில் அந்நடத்தையை பாராட்டுவதும், சாக்லேட் போன்றவைகளை பரிசளிப்பதும் இந்நோயை விரைவில் குணமாக்கும்.

படுக்கையில் சிறுநீர் கழிக்கும் நோயை குணமாக்க மேற்சொன்ன எல்லா முறைகளை விட சிறந்த முறை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு அன்பையும் மனரீதியான அரவனைப்பையும் அளிப்பதுதான்

இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா இலகு வெற்றி


இந்தியா, இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முத்தரப்பு தொடரில் இந்தியா இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது போட்டியில் ரோஹிட் சர்மாவின் சதத்துடன் இந்தியா அணி இலகு வெற்றிப் பெற்றது.

சிம்பாப்வேயின் புலவாயோவில் இன்று நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்தியா அணி முதலில் களதடுப்பை மேற்கொள்ள தீர்மாணித்தது. இதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 49.5 ஓவர்களுக்கு அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 242 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் மெத்தியூஸ் 75 ஓட்டங்களையும், டில்சான் 61 ஓட்டங்களையும் பெற்றனர்.

243 எனும் வெற்றி இலக்கை அடைய பதில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி 43.3 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 243 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது. துடுப்பாட்டத்தில் ரோ ஹிட் சர்மா 101 ஓட்டங்களையும், விராட் ஹோலி 82 ஓட்டங்களையும் பெற்று அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.

போட்டியின் ஆட்ட நாயகனாக ரோஹிட் சர்மா தெரிவு செய்யப்பட்டார். அடுத்த போட்டி ஜீன் முதலாம் திகதி இலங்கை மற்றும் சிம்பாப்வே ஆகிய அணிகள் மோதுகின்றன.

Sunday, May 23, 2010

மரணத்தின் விளிம்பில் மனித இனம்.... மீளுமா பூமி?

உலகின் பல ஆய்வாளர்களும் கூட கண்டுகொள்ளாத அல்லது ஒருவேளை கண்டு சொல்லாத மிகப்பெய செயல் ஒன்று தொடர்ந்து நடந்தபடி பூமியை வாட்டிவதைத்து உருக்கிக்கொண்டே இருக்கிறது.

இமயமலை, ஆர்டிக், அண்டார்டிக் உருக மிக முக்கிய காரணம் நம் பூமியின் அடிப்பகுதியிலிருந்து மேல் எழும்பி வரும், வந்து கொண்டிருக்கும் லாவா மற்றும் மேக்மாவின் அளவு கடந்த, தடுக்கப்படாத வெப்பமே. இதைத்தடுக்க பெரும் உதவிபுரியும் மாபெரும் நீரோட்டங்களிலிருந்தும், கச்சா எண்ணெய்க் கிடங்குகளிலிருந்தும், வாயுக் கிடங்குகளிலிருந்தும் இவற்றை லட்சக்கணக்கான கன சதுர மீட்டர் அளவு வெளியே எடுத்துப்பயன்படுத்தி வரும் தொடர் அக்கிரமத்தால் உள் வெப்பத்தைத் தடுக்கும் நடவடிக்கையும் நில அதிர்வின்போது எண்ணெய் மற்றும் காற்று ஷாக் அப்சர்பரைப்போல் பயன்படும் இவற்றின் உதவியும் இழக்கப்பட்டுவிட்டது.

எனவே, பூமியின் சகல மேல்பகுதிகளும் வெப்பத்தால் தகிக்கிறது. போதாததற்கு மேல்புறம் தாக்கும் வெப்பமும் கூட. எந்தப் பகுதியில் உருகும் ஐஸ் மலைகளும், கீழ்புறமாகவே நகர்கின்றன. எனவே முதலில் பூமியின் உட்புற அடிப்புறப் பகுதியே வெப்பத்தை அதிகம் சந்திக்கிறது என்பது தெளிவு. இன்றிலிருந்து நாம் பூமியின் உட்புற அனைத்து ஆதாரங்களையும் பயன்படுத்துவதை 100 சதம் நிறுத்திவிட்டாலும் கூட பூமியைக் காக்கவே முடியாது. மேலும் அவற்றின் பயன்பாட்டை 10 சதம் கூட நம்மால் குறைத்துக்கொள்ளவும் முடியாது. அப்படி அவற்றிற்கு அடிமையாகிவிட்டோம். ஏற்கனவே வெளியே எடுக்கப்பட்டுவிட்ட மேற்படி பொருட்களின் காரணமாக பூமியின் உட்புறத்தில் கணக்கற்ற அளவற்ற பெரிய பெரிய வெற்றிடங்கள் உருவாகிவிட்டன். எதிர்வரும் நிலநடுக்கங்களால் நாம் வாழும் பகுதி நடுங்கினால் அப்படியே சில பல கிலோ மீட்டர் ஆழத்தில் நாம் புதைந்துவிடுவது உறுதி. மாறாக கடலுக்குள் பூமி புதையாது.

காரணம் கடல் என்பதன் ஆழம் நம் பூமியின் மையம் வரையான உயரத்தில் (6400 கி.மீ) சுமார் 30 முதல் 25,000 அடிகள் வரைதான். ஒவ்வொரு முறையும் நிலநடுக்கம் என்பது பூமியின் மையத்திலிருந்து 400, 150, 15 கி.மீ. ஆழங்களிலிருந்து தாக்குவதாக அறிகிறோம். அப்படி மேல் நோக்கி வரும்போதெல்லாம் மேக்மா, லாவாவைத் தள்ளிக்கொண்டே வருகிறது. இவ்வாறு மத்திய வெப்பக்குழம்பு கட்டாய இடப்பெயர்ச்சி செய்வதால்தான் நிலநடுக்கங்கள் வருகின்றன. உதாரணமாக சுனாமியின் போதான நிலநடுக்கத்தின்போது சுமத்ராவின் அருகே அதன் 13,000 அடி ஆழப்பகுதியில் பூமியின் உட்புறமிருந்து வெடித்து வந்து நிரம்பிய லாவா மேக்மாவின் அளவோ 1400 கி.மீ. நீள, 200 கி.மீ. அகல 5000 அடி உயரத்திற்கான புது தீவாகும். இதன் தள்ளுதலாலேயே கரைப்பகுதிகளைக் கடல் நீர் தாக்கியது. இந்நிகழ்வு கடலின் அடிப்புறத்திலேயே நடந்தது.

இந்தப் புதிய தீவின் அளவோ இந்தியாவில் முக்கால் பகுதி. இவற்றாலும் கடல் மட்டம் பெரும் அளவு உயர்ந்து வருகிறது என்பதும் மறுக்கமுடியாத உண்மை. பாறைகளின் மீது கட்டடங்களின் மீது படும் வெப்பமே பூமியை பாதிக்கும் எனும்போது கோடான கோடி வாகனங்கள் மீது பட்டு வரும் வெப்ப அளவு எப்படி இருக்கும்? உலகம் பொதுக்குடும்பம் என்றாகிவிட்ட நிலையில் ஒரு வீட்டுக்காரன் குடும்பத்தை நாசப்படுத்திப் பிழைப்பதும் மற்ற வீட்டார்கள் அவனால் பாதிப்படைவதும் என்பது என்ன நியாயம்? கார்பன் அளவு, வளர்ந்த நாடுகளால் ராட்சச அளவில் வெளியாக்கப்படுவதும் மிக மிக கண்டிக்கப்படவேண்டியது. மக்கள் தொகையைவிட மற்ற பல செயல்களும் நாசத்திற்கு தூபம் போடுகின்றன.

கொட்டாவி விடாதே, குண்டு பல்பு போடாதே என்று கூறும் உலக நாடுகளும் நம் அரசுகளும் அவற்றைவிட பல லட்சம் மடங்கு நாசம் செய்யும் ஓட்டை வாகனங்களின் கார்பன் வெளியீட்டிற்கு என்ன செய்கின்றன? சமீபத்திய சுனாமியில் வெளித்தள்ளப்பட்ட ராட்சத அளவிளான உள் வெப்பம் உலகையே மிக மிக மோசமாக பாதித்துக்கொண்டே வருவது மட்டுமின்றி உலகின் சுற்றுச்சூழலை அழிவின் அடுத்த கட்டத்திற்கும் கொண்டு சென்று விட்டது என்பதே நிஜம். இந்நிலையில் பொதுமக்களாகிய நாமும் சர்வதேச நாடுகளும் எந்த அளவிற்கு நம் சந்ததியினருக்கு இந்த பூமியை நலமுடன் விட்டுவைக்கப்போகிறோம் என்பதே ஆயிரம் டாலர் கேள்வி. சமீபத்திய திரைப்படமான 2012ன் உலக அழிவு என்பது இன்னும் சில வருடங்களில் உண்மையிலேயே நடப்பதற்கான சாத்தியங்கள் மிக மிக அதிகமாக உள்ளன என்பது கசப்பான உண்மைதான்.

பாலிதீன் கழிவு, சாயக்கழிவு, தோல் கழிவு, பூச்சி மருந்துகள், உரங்கள், சுத்தப்படுத்தப்படாத ஏரிகள், கால்வாய்கள், கோடிக்கணக்கான வாகனங்கள், ஆடம்பரமான மின்சார நுகர்வுகள், மீண்டும் மீண்டும் போடப்படும் சாலைகள், உருக்கப்படும் தார், இடிக்கப்படும் கட்டடங்கள், எக்கப்படும் வாகனங்கள், தீப்பிடிக்கும் எண்ணெய் கிணறுகள், கடலைத் தூர்த்துக் கட்டப்படும் மாபெரும் நகரங்கள், ராக்கெட், செயற்கைகோள்கள் ஆதிக்கம், விண் குப்பைகள், காட்டுத்தீ, கடலில் கொட்டப்படும் அதீத கழிவுகள், அணு சோதனைகள் என்று அளவிடமுடியாத அழிவின் கோரக்கரங்கள் நம் பூமியை அரவணைத்து நெருக்குகின்றன என்பதே உண்மை. இவற்றிலிருந்து மீளுமா பூமி? நம் சந்ததிகள் உயிர் வாழக்கொஞ்சம் மூச்சுக்காற்றும், குடிநீரும் அவசியம் என்பதை காலங்கடந்தே நாம் உணரப்போகிறோம் என்பது மட்டும் மெய்.

கர்நாடகத்தில் விமான விபத்தில் 158 பேர் பலி

துபாயிலிருந்து மங்களூர் வந்த விமானம் தரையிறங்கிய சமயத்தில், வேகமாக ஓடி ஓடுதளத்தை விட்டு விலகி தீப்பிடித்துக் கொண்டதில் வெடித்துச் சிதறியது. இதில் விமானத்தில் இருந்த 158 பேர் உயிரிழந்தனர். 8 பேர் படுகாயங்களுடன் மீ்ட்கப்பட்டனர்.
இன்று காலை ஆறரை மணியளவில் இந்த கோரச் சம்பவம் நடந்தது.

விமான விபத்து குறித்து ஏர் இந்தியா நிறுவன மும்பை பிராந்திய இயக்குநர் அனுப் ஸ்ரீவத்சவா செய்தியாளர்களிடம் பேசுகையில்,

விபத்துக்குள்ளான அந்த போயிங் 737 விமானம் இன்று அதிகாலை 1.15மணிக்கு துபாயிலிருந்து கிளம்பி மங்களூர் வந்தது.

காலை 6.03 மணியளவில் விமானம் தரையிறங்கியது. அப்போது எதிர்பாராதவிதமாக ரன்வேயில் வேகமாக ஓடிய விமானம், ரன்வேயை விட்டு விலகி ஓடி விபத்துக்குள்ளானது.

இதில் விமானம் வெடித்துச் சிதறியது. விபத்தில் சிக்கியவர்களில் 8 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். விமானத்தில் 4 குழந்தைகள் உள்பட 158 பயணிகளும், 6 ஊழியர்களும் இருந்தனர்.

விபத்துக்கான காரணம் குறித்து தற்போது தெரியவில்லை. பல்வேறு தகவல்களை எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தார்.

ரன்வேயில் அது இறங்கியபோது படு வேகமாக விமானம் சென்றதால் அதில் தீப்பிடித்துக் கொண்டது. சில விநாடிகளில் விமானம் வெடித்துச் சிதறியது.

போதிய வெளிச்சமில்லாத நிலையில் விமானத்தை தரையிறக்கியதே விபத்து க்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. ஆனால் அந்த சமயத்தில் வானிலை நன்றாகவே இருந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேசமயம், விமானியின் தவறே இதற்குக் காரணம் என்றும் முதல் கட்டத் தகவல்கள் கூறுகின்றன. பைலட் செர்பியாவைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. இணை பைலட் இந்தியாவைச் சேர்ந்தவர் ஆவார்.

Monday, April 19, 2010

மயங்கி விழுந்த அசின்... பதறிய விஜய்!

ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு நடிகர் விஜய்யுடன், நடிகை அசின் ஜோடி சேரும் புதிய படத்தின் சூட்டிங் காரைக்குடி பகுதியில் நடந்து வருகிறது.

மலையாளத்தில் வெளியாகி சுமாரான வெற்றி பெற்ற பாடிகார்ட் படத்தின் ரீ-மேக்கான இப்படத்திற்கு தமிழில் இன்னமும் பெயர் சூட்டப்படவில்லை.

காரைக்குடி பகுதியில் நடந்து வரும் சூட்டிங்கில் விஜய், அசின், ராஜ்கிரண் உள்ளிட்ட நட்சத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்று வருக்கிறார்கள். படம் பிடிக்கப்படும் நேரம் போக மீதி நேரத்தில் அசின் தனக்கான கேரவனில் ஓய்வெடுப்பார்.

நேற்று இது‌போல கேரவனில் ஓய்வெடுத்து விட்டு, அடுத்த காட்சிக்கு தயாவதற்காக மேக்-அப் போட்டுக் கொண்டிருந்தபோது திடீரென அசின் மயங்கி விழுந்தார். இதை பார்த்த படக் குழுவினர் அவரை உடனடியாக அங்குள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர்.

அசினுக்கு மயக்கம் என்றதும் விஜய் உள்ளிட்ட அனைவரும் பதறிவிட்டனர்.

அங்கு டாக்டர்கள் சிகிச்சைக்கு பிறகு அசினுக்கு மயக்கம் தெளிந்தது. கேரவன் வேனில் பொருத்தப்பட்டிருந்த ஏ.சி. மெஷினில் காஸ் கசிவு ஏற்பட்டதால் அசினுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக படக்குழுவினர் தெரிவித்தனர்.


Sunday, April 11, 2010

மீண்டும் நடிப்பேன் : சோனியா அகர்வால்


செல்வராகவனை விவாகரத்து செய்த சோனியா அகர்வால் மீண்டும் நடிக்க வருகிறார்.

இதுபற்றி அவர் கூறியதாவது:-

செல்வராகவனும், நானும் கணவன்-மனைவியாக வாழ்ந்த நாட்கள் மறக்க முடியாதவை. விவாகரத்து செய்யும் போது நிறைய யோசித்தேன். பிறகு நடப்பது நடக்கும் என்று சம்மதித்தேன். இப்போது நான் சுயமான பெண். இந்த சுதந்திரம் எனக்கு பிடித்து இருக்கிறது.

விவகாரத்தானதும் சொந்த ஊருக்கு அழைத்தனர். ஆனால் எனக்கு போக மனமில்லை. மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளேன். கதைகள் கேட்டுக் கொண்டு இருக்கிறேன். விரைவில் நடிப்பேன்.

திருமணத்துக்கு பிறகு நடிக்க ஆர்வம் இல்லாமல் இருந்தேன். இப்போது ஆசை வந்துள்ளது.


Monday, April 5, 2010

பையா

பாதுகாப்பான பின் சீட்டை விட, பரபரப்பான முன் சீட் விரும்பிகளுக்காக எடுக்கப்பட்ட பயணப்படம் இது.

காதல், மோதல் என்று வழக்கமான ரூட்தான் என்றாலும், எப்படா க்ளைமாக்ஸ் வரும் என்ற சலிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனாலும் மீட்டருக்கு மேலே போட்டுக் கொடுக்கிற ஆசை வரணுமே, ம்ஹ¨ம்!

வழியிலே பார்த்த பெண்ணுக்காக குழியிலே கூட விழலாம் என்கிற அளவுக்கு லவ்வில் விழுந்து வைக்கிறார் கார்த்தி. அவரை மயக்கிய அந்த அழகான பெண் தமன்னா. அதென்னவோ தெரியவில்லை, இவர் போகும் இடத்துக்கெல்லாம் தமன்னாவும் வருகிறார் சொல்லி வைத்த மாதிரி. அப்படிதான் ரயில்வே ஸ்டேஷனிலும் ஒரு சந்திப்பு. உடன் வரும் ஆசாமி, கார்த்தியை டாக்சி டிரைவர் என்று நினைத்துக் கொண்டு "வண்டி சென்னை வருமா" என்று கேட்க, மனசுக்குள் ஹார்ன் அடிக்கிறது கார்த்திக்குக்கு. ஆனால், ஆசாமி எதற்காகவோ இறங்குகிற நேரம் பார்த்து "வண்டிய கிளப்பு" என்கிறார் தமன்னா. அவ்வளவுதான் விருட்டென்று 120 க்கு போகும் கார்த்தி, தமன்னாவின் விருப்பத்திற்கேற்ப மும்பை வரைக்கும் போகிறார் காரிலேயே. ஆசைப்பட்ட பெண் அருகில் இருந்தாலும், பயணம் என்னவோ பதற வைக்கிறது.

தமன்னாவை தேடி ஒரு கும்பலும், கார்த்தியை தேடி இன்னொரு கும்பலும் விரட்ட, இருவரையும் புஜபலத்தால் வென்று தமன்னாவை மும்பைக்கே கொண்டு சேர்க்கிறார் கார்த்தி. அப்போதும் கூட தன் காதலை சொல்லாத கார்த்தியிடம், எப்படி சேர்ந்தார் தமன்னா? முடிவு.
அவிழ்த்துவிட்ட காளையிடம், குடையை விரித்து காட்டிய மாதிரி ஒரு ஆக்ரோஷம் கார்த்தியிடம். அதே நேரத்தில் குணா கமல் மாதிரி தமன்னாவை காதலால் கசிந்துருகுவதும் அற்புதம். லிப்ட் கேட்கிற சாப்ஃட்வேர் ஆசாமியை வண்டியில் ஏற்றி, பின்பு காதலுக்கு வேட்டு வைப்பானோ என்று அஞ்சி நட்ட நடுவழியில் இறக்கிவிடுகிற காட்சியெல்லாம் கலகலப்பு. தமன்னாவுக்கு யார் மீதும் லவ் இல்லை என்கிற போது வண்டியின் ஸ்பீடா மீட்டர் எகிறுவதும், அடுத்த காட்சியிலேயே சொய்ங்ங் என்று கிழிறங்குவதுமாக கார்த்தியின் சேஷ்டைகளில் தியேட்டரை கலகலக்கிறது.

அவ்வப்போது வண்டியை நிறுத்தி இயற்கையை ரசிப்பதும், மழையில் நனைந்து ரசிகர்களை குளிர வைப்பதும்தான் தமன்னாவின் மெயின் நடிப்பாக இருக்கிறது. தேனும் தித்திப்பும் மாதிரி, இணைந்தே இருக்கிறது தமன்னாவும் கவர்ச்சியும். போதாதா? பேஸ்த் அடித்துப் போகிறது மொத்த தியேட்டரும்.

இடையிடையே வரும் தாதாக்களின் எபிசோடு, பல முறை ஷேவ் செய்யப்பட்ட பிளேடு. தமிழ்சினிமாவிலேயே தாதாக்கள் மாறி ரொம்ப வருஷம் ஆச்சுங்க சாரே... சண்டக்கோழி, ரன் என்று முந்தைய படங்களின் சாயலை விட முடியவில்லை லிங்குசாமியால். அவருக்கேயுரிய காதல் நகாசுகள் இந்த படத்தில் மிஸ்சிங். சண்டக்கோழியில் மீராஜாஸ்மினின் குறும்புகள் மறுபடியும் நினைவில் வந்து ஏங்க வைக்கிறதே சாமி...

பையனின் துள்ளாட்டம் யுவன்சங்கர் ராஜாவிடம்தான். பின்னணி இசை மிரட்டல் என்றால், பாடல்கள் எல்லாமே தாலாட்டு. அடடா மழை போன்ற மெலடிகளும், யுவனே பாடியிருக்கும் ஒரு சோகப்பாடலும் இந்த வருடத்தின் சூப்பர்ஹிட் வரிசையில்.

மயங்க வைத்த மற்றொருவர் ஒளிப்பதிவாளர் மதி. ஆக்ஷன் காட்சிகளில் அதிர வைக்கிற அதே கேமிரா, டூயட்டுகளில் அழகாகிவிடுகிறதே, அற்புதம். கார் சேசிங் காட்சிகளில் ஆங்கில படங்களை நினைவுபடுத்தியிருக்கிறார். எடிட்டர் ஆன்ட்டனியின் 'கட்டிங்'கும் கூட செம போதைதான்! விசாலமாக பயணிக்க முடியாமல் காருக்குள்ளேயே முடங்கிப் போனதால், பிருந்தாசாரதியின் பேனாவும் 'மூடி'யாகவே இருக்கிறது. கிடைத்த சந்தர்ப்பத்தில் அதையும் மீறி மனசுக்குள் 'இங்க்' தெளிக்கிறார் மனுஷன்.

நெடுஞ்சாலை பயணம் ஓ.கே. நிழல்தான் கொஞ்சம் கம்மி!

Sunday, April 4, 2010

உள்ளாடைக்குள் மறைத்து போதை மருந்து கடத்திய 6 வயது இரட்டையர்கள் கைது

நைஜீரியா நாட்டில் உள்ள லாகோஸ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு ஒரு விமானம் புறப்பட்டு சென்றது. அதில், பயணம் செய்தவர்களிடம் பரிசோதனை நடத்தப்பட்டது.

அவர்களில் ஒரு பெண்ணும், அவளது 6 வயது இரட்டை குழந்தைகளும் ஜட்டிக்குள் மறைத்து “கோகைன்” என்ற போதை பொருள் கடத்தியது தெரிய வந்தது. அப்பெண்ணிடம் இருந்து 3 கிலோவும், 2 சிறுவர்களிடம் இருந்து 700 கிராமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து, அவர்கள் 3 பேரையும் நைஜீரியா போலீசார் கைது செய்தனர். அப்பெண்ணின் கணவரிடம் போதை பொருள் எதுவும் இல்லை.

Sunday, March 28, 2010

தென் கொரியா கப்பல் மூழ்கியது : 40 பேரை காணவில்லை

தென் கொரியா கப்பல் ஒன்று வட கொரியா அருகே மூழ்கி விட்டதாகவும், அதில் பயணித்த 40 பேரை காணவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென் கொரியாவுக்கும், வட கொரியாவுக்கும் இடையே கடல் எல்லை பிரச்னை நீண்ட காலமாக இருந்து வருகிறது.இதனால் இரு நாடுகளுக்கும் இடையே எப்போதும் பதற்றமான நிலை இருந்து வருகிறது.

இதனிடையே இந்த பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக வட கொரியாவில் தற்போதுள்ள அரசை கவிழ்க்க அமெரிக்காவும், தென் கொரியாவும் முயற்சிப்பதாகவும், ஆனால் ஆட்சியைக் காப்பாற்ற அணு ஆயுத தாக்குதல் நடத்தவும் தாங்கள் தயாராக இருப்பதாகவும் வட கொரியா நேற்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில், வட கொரியாவுடனான கடல் எல்லை பிரச்னை உள்ள இடத்தின் அருகே சுமார் 1,200 டன் எடைகொண்ட தென் கொரிய ரோந்து கப்பல் ஒன்று , 104 பணியாளர்களுடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென மூழ்கியது.

இது குறித்த தகவலறிந்ததும் மீட்பு படையினர், உடனடியாக விரைந்து சென்று 58 பேரை மீட்டனர். ஆனால் 40 பேரை காணவில்லை என்றும், அவர்களை தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தென் கொரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் தங்களது கப்பல் மூழ்கடிக்கப்பட்டதற்கு வட கொரியா காரணமாக இருக்கலாம் என்று தாங்கள் சந்தேகிப்பதாகவும் அந்த அதிகாரி மேலும் கூறினார்

Sunday, March 21, 2010

அவுஸ்திரேலியாவில் கடும் சுறாவளி தாக்குதல்

வடகிழக்கு அவுஸ்திரேலியாவில் வீசிய கடும் சுறாவளி காரணமாக அங்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. சுமா‌ர் 60 ஆ‌யிர‌த்‌தி‌ற்கு‌ம் மே‌ற்ப‌ட்ட ‌வீடுக‌ளி‌ல் ‌மி‌ன் இணை‌ப்பு து‌ண்டி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளது.அவுஸ்திரேலியாவின் ஆ‌‌ர்லி கடற்பகுதியில் உருவாகியிருந்த உல்யூ (Ului) புயல் இன்று காலை 200 கிலோ மீட்டர் வேகத்தில் கரையைக் கடந்துள்ளது.

புயல் கரையைக் கடக்கும் போது வீசிய சுறாவளிக் காற்றில் கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. மரங்களும், மின் கம்பங்களும் முறிந்து விழுந்துள்ளன. கடற்கரையில் இருந்த பல படகுகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான 'கிரேட் பேரியர் ரீஃப்' எனும் இடத்தில் உள்ள சுமார் 60,000க்கும் மேற்பட்ட வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் ஆஸ்ட்ரேலிய அமைச்சர் நீல் ராபர்ட்ஸ் கூறியுள்ளார்.

Monday, March 15, 2010

“ஜேர்மனியில் வரலாறு காணாத இராட்சத விபத்து!புயலடித்த தேசம்போல காட்சியளிக்கும் நகரம்.

காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் ஒருவரும் மரணமடையவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலநிலையும், தவறாக கார்களை ஓட்டியதுமே காரணம் என்று கூறப்படுகிறது.




ஜேர்மனியில் நேற்று வெள்ளி கிழமை வரலாறு காணாத பெரிய விபத்து இடம் பெற்றது. இந்த அனர்த்தத்தில் சுமார் 231 வாகனங்கள் ஒரேயடியாக சிக்குண்டுபோயின.

ஜேர்மனிய ஊடகங்கள் இதை இராட்சத விபத்து என்று வர்ணித்துள்ளன.

171 கார்களும் 35 பாரவண்டிகளும் இதில் சிக்குண்டன.

ஏ8 பிரதான வீதியில் அவுஸ்பேக் – பிறிட்பேர்க் நகரங்களுக்கு இடையில் இந்த விபத்து இடம் பெற்றது.

இதனால் போக்குவரத்தில் பாரிய நெரிசலும் தடைகளும் ஏற்பட்டுள்ளன. இதுவரை வீதி சீராக்கப்படவில்லை, இப்பகுதி முழுவதும் புயலடித்த தேசம்போல காட்சியளிக்கிறது.

17 முதல் 25 பேர்வரை படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் ஒருவரும் மரணமடையவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலநிலையும், தவறாக கார்களை ஓட்டியதுமே காரணம் என்று கூறப்படுகிறது.


































Sunday, February 7, 2010

சூரியனின் கதை

நமது சூரியனும் அதன் கோள்களும் அமைந்துள்ள அண்டத்தினைப் பால் வழி என்பர். இரவு வேளையில், தெளிவான வானத்தில், கிழக்கு மேற்காகப் பிரகாசமான ஓர் ஒளிப்பட்டை அமைந்திருப்பதைக் காணலாம். இந்த ஒளிப்பட்டைக்குள் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் இருக்கின்றன. பாலாறு ஒன்று வானத்தில் பாய்வதாகக் கற்பனை செய்து கிரேக்க விஞ்ஞானிகள் இதற்குப் பால் வழி என்று பெயரிட்டனர். இந்தியத் தத்துவ ஞானிகள் 'ஆகாய கங்கை' என்றனர். பால் வழியின் ஒரு அந்தத்தில் நமது சூரியனும் அதன் கோள்களும் அமைந்திருக்கின்றன.


மாணவர்களுக்கு ஏற்ற அடிப்படை அறிவியல் நூல்கள் வெளிவர வேண்டிய அவசியம் இன்று உணரப்பட்டுள்ளது. பாடநூல்களோடு துணை நூல்கள் பலவும் வெளிவர வேண்டும். விரிந்து வரும் அறிவியல் உண்மைகளைச் சகலரும் இலகுவில் தெரிந்து கொள்வதற்கு இவ்வகை நூல்கள் வழி அமைக்கும்.

பி.டி.​ கத்தரிக்காயை வர்த்தக நோக்கில் பார்க்கும் மத்திய அரசு: ஜகி வாசுதேவ்

பி.டி. கத்தரிக்காய்க்கு ​அனுமதி அளிப்பது தொடர்பாக மத்திய அரசு வர்த்தக நோக்கில் பரிசீலனை செய்து வருகிறது என ஈஷா யோக மைய நிறுவனர் ஜகி வாசுதேவ் கூறினார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப் பொருள்களில் மிகுந்த நச்சுத்தன்மை உள்ளது.​ பல ஆயிரம் ஆண்டுகளாக கத்தரிக்காய் சாகுபடி நன்றாக உள்ளது.

இந் நிலையில்,​​ ஆரோக்கியத்தைப் பாதிக்கும் பி.டி.​ ரக பயிர்களை சந்தைக்கு கொண்டு வரத் தேவையில்லை.​ இது பொறுப்பற்ற செயல்.​ பி.டி.​ கத்தரிக்காய்க்கு அனுமதி அளித்தால் அனைத்து உணவுப் பொருள்களும் சந்தைக்கு வந்துவிடும்.​ இது மிகுந்த ஆபத்தை விளைவிக்கும்.

ஐரோப்பா உள்பட பல்வேறு நாடுகளில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.​ அமெரிக்கா,​​ ஜப்பான் போன்ற நாடுகளில் அரசை மீறி தனியார் ஆதிக்கம் செலுத்தி வருவதால் வேறு வழியின்றி அங்கு பி.டி.​ ரக பயிர்கள் பயிரிடப்பட்டன.​ அதன் பாதிப்பு இன்றும் தெரிகிறது.

பி.டி.​ பயிர்களை பயிரிடக் கூடாது என வேளாண் விஞ்ஞானிகள்,​​ இயற்கை ஆர்வலர்கள்,​​ விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.​ இருப்பினும்,​​ மக்களின் நலனில் அக்கறை கொள்ளாமல் பி.டி.​ ரக பயிர்களை சந்தைக்கு கொண்டு வர மத்திய அரசு வர்த்தக நோக்கில் பரிசீலனை செய்து வருகிறது.

வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து விதைகளை வாங்கும் நிலை தொடர்ந்தால் இந்தியா அடிமைப்படும் சூழல் உருவாகும்.​ நாட்டில் பல விதமான விதைகள் குறைந்து வருகின்றன.​ 60 சதம் பேர் சைவ உணவுகளையும்,​​ 40 சதம் பேர் அசைவ உணவுகளையும் விரும்பிச் சாப்பிடுகின்றனர்.​

மனிதனுக்குத் தேவையான சத்து,​​ சைவ உணவில்தான் இருக்கிறது.​ ஆனால்,​​ அதற்கு நல்ல விதைகள் தேவை.​ அவற்றை இயற்கையான முறையில் உருவாக்க வேண்டும்.

நல்ல விதைகள் விவசாயிகள் கையில் இருக்க வேண்டும்.​ அதனால்,​​ மேற்கொள்ளும் ஆராய்ச்சிகள் பக்குவமாகவும்,​​ இயற்கையாகவும் இருப்பது அவசியம்.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய்க்கு அனுமதி அளிப்பது தொடர்பாக அவசரம் காட்டப்படமாட்டாது என தமிழக அரசு அறிவித்துள்ளது விவசாயிகளை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.​ இருப்பினும்,​​ அவற்றை முற்றிலும் தடை செய்ய வேண்டும்.​ இது குறித்து ஈஷா தரப்பில் அரசிடம் வலியுறுத்தப்படும்.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரியை தடை செய்து அனைத்து மக்களையும் காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Friday, February 5, 2010

தரமில்லாத அரசு பல்கலைகழகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.விஸ்வநாதன்

சென்னை, பிப். 06: விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன், சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: "தனியார் கல்லூரிகளின் வளர்ச்சிகளை ஊக்குவித்தால் மட்டுமே உயர் கல்வியில் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரிக்க முடியும். முதல் கட்டமாக அதிக கல்லூரிகளை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

யுஜிசி குழுவில் 1500 கல்வியாளர்கள் கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தி நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு அங்கீகாரம் வழங்கினர். ஆனால் தாண்டன் குழுவினர் டெல்லியில் இருந்து கொண்டே தகவல்களை கேட்டு தெரிந்து கொண்டு அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரைத்துள்ளனர்.

நிகர்நிலை அங்கீகாரம் பெற்று 2 ஆண்டுகளே ஆன பல பல்கலைக் கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரைத்துள்ளனர். பல்கலைக்கழகம் தொடங்கி குறைந்தது 10 ஆண்டுகள் கடந்தால்தான் முழு வளர்ச்சியை பெற முடியும். தரமில்லாத பல்கலைக்கழகங்கள் மீது தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம். அதற்கு முன்பு ஒரு அறிவிப்பாவது கொடுக்க வேண்டும். எங்கள் தவறுகளை சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்வோம்.

மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பல பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி மாணவர்கள் படிக்க எந்த வசதியும் இல்லை. அந்த பல்கலைக்கழகங்கள் மீதும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்கலைக்கழகங்களின் பிரச்னையில் அரசின் செயல்பாடு வெளிப்படையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்

Wednesday, February 3, 2010

பயமில்லாமல் தேர்வு எழுதுங்கள்: பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கடிதம்

பிளஸ் 2 மாணவ, மாணவிகள் தங்கள் பாடங்களை நன்றாக படித்து பயமில்லாமல் நம்பிக்கையுடன் தேர்வு எழுத வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மாணவ, மாணவி களுக்கு கடிதம் எழுதுகிறார்.

கடந்த ஆண்டு பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனித் தனியே கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் பொதுத் தேர்வினை நல்ல முறையில் பயமில்லாமல் எழுத வேண்டும் என்றும், பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு இது வாழ்க்கையின் திருப்பு முனையாக அமைவதால் மிக கவனத்துடன் தேர்வினை எழுதி வெற்றி பெற வேண்டும் எனவும் வாழ்த்தும், அறிவுரையும் கூறியிருந்தார்.

இக்கடிதம் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை மூலம் அனைத்து பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ, மாணவிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தேதியில் பிளஸ் 2 தேர்வு தொடங்குகிறது. இந்த ஆண்டும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கடிதம் எழுதுகிறார். இக்கடிதத்தில், மாணவ, மாணவிகள் நன்றாக படித்து பயமில்லாமல் நம்பிக்கையுடன் பொதுத் தேர்வினை எழுத வேண்டும் என்று அறிவுரை கூற இருக்கிறார். இந்த கடிதம் மாவட்ட கல்வி அலுவலகம் மூலம் அனைத்து பிளஸ் 2 மாணவ, மாணவி களுக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளது.

ஆசிரியர்கள் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு தேர்வு வரும் வரை முடிந்த வரை அனைத்து உதவிகளை யும் செய்து அவர்களை தேர் வில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான மையங்கள் அதிகப்படுத் தப்பட்டுள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் பொதுத் தேர்வு எழுதுவதற்கு அதிக தூரம் செல்ல வேண்டிய நிலை இருக்காது என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சூரியனின் கதை












நமது சூரியனும் அதன் கோள்களும் அமைந்துள்ள அண்டத்தினைப் பால் வழி என்பர். இரவு வேளையில், தெளிவான வானத்தில், கிழக்கு மேற்காகப் பிரகாசமான ஓர் ஒளிப்பட்டை அமைந்திருப்பதைக் காணலாம். இந்த ஒளிப்பட்டைக்குள் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் இருக்கின்றன. பாலாறு ஒன்று வானத்தில் பாய்வதாகக் கற்பனை செய்து கிரேக்க விஞ்ஞானிகள் இதற்குப் பால் வழி என்று பெயரிட்டனர். இந்தியத் தத்துவ ஞானிகள் 'ஆகாய கங்கை' என்றனர். பால் வழியின் ஒரு அந்தத்தில் நமது சூரியனும் அதன் கோள்களும் அமைந்திருக்கின்றன.


மாணவர்களுக்கு ஏற்ற அடிப்படை அறிவியல் நூல்கள் வெளிவர வேண்டிய அவசியம் இன்று உணரப்பட்டுள்ளது. பாடநூல்களோடு துணை நூல்கள் பலவும் வெளிவர வேண்டும். விரிந்து வரும் அறிவியல் உண்மைகளைச் சகலரும் இலகுவில் தெரிந்து கொள்வதற்கு இவ்வகை நூல்கள் வழி அமைக்கும்
.