'யாருமே இல்லாத அனாதையாக வாழும் ஹீரோவுக்கும், எல்லோரும் இருந்து அனாதையாக வாழும் நாயகிக்கும் இடையே உள்ள யதார்த்தமான நட்பு, எப்படி காதலாகிறது என்பதுதான் இந்த 'பயபுள்ள' படம். |
வழக்கமாக படங்களில் காதலுக்கு எதிராக வில்லன்கள் இருப்பார்கள். ஆனால் இதில் காதலுக்கு காரணமாக வில்லன் இருப்பார். பாசத்தோடு கால்நடைகளை கவனித்துக்கொள்ளும் நாயகன், உறவு முறை வைத்து, சொந்தம் கொண்டாடுவது படத்தில் வித்தியாசமாக இருக்கும். கிராமத்து மண் வாசம் வீசும் ஹீரோ-ஹீரோயினாக கவின், கவிதாஸ்ரீ அறிமுகங்கள் நடிக்க, சர்மிலி, வடிவுக்கரசி, விட்டல், ராகவ் மற்றும் பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு-கணேஷ் ராஜா, பால ஐயப்பன், எடிட்டிங்-சுதா, இசை-கபிலேஸ்வர், பாடல்கள்-சரவணன், கபிலேஸ்வர், முருகன் மந்திரம், உதயக்குமார், ஆக்ஸன்-மிரட்டல் செல்வம், எழுத்து -இயக்கம் கே.எஸ்.சரவணன். ராமநாதபுரம் மாவட்டத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் ரசிகர் மன்றத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.பி.பால நமச்சிவாயன், ஆர்.மணிமாறன் இணைந்து 'தேர்ட் ஐ' மீடியா விஷன் சார்பில் தயாரித்துள்ளது. இப்படத்தினை வாழ்த்தி ரஜினி கடிதம் எழுதி கொடுத்துள்ளார் என்கிறது படக்குழு. |
Thursday, February 10, 2011
பயபுள்ள எப்படி இருப்பான்?
Subscribe to:
Post Comments (Atom)
சூரியனின் கதை
நமது சூரியனும் அதன் கோள்களும் அமைந்துள்ள அண்டத்தினைப் பால் வழி என்பர். இரவு வேளையில், தெளிவான வானத்தில், கிழக்கு மேற்காகப் பிரகாசமான ஓர் ஒளிப்பட்டை அமைந்திருப்பதைக் காணலாம். இந்த ஒளிப்பட்டைக்குள் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் இருக்கின்றன. பாலாறு ஒன்று வானத்தில் பாய்வதாகக் கற்பனை செய்து கிரேக்க விஞ்ஞானிகள் இதற்குப் பால் வழி என்று பெயரிட்டனர். இந்தியத் தத்துவ ஞானிகள் 'ஆகாய கங்கை' என்றனர். பால் வழியின் ஒரு அந்தத்தில் நமது சூரியனும் அதன் கோள்களும் அமைந்திருக்கின்றன.
மாணவர்களுக்கு ஏற்ற அடிப்படை அறிவியல் நூல்கள் வெளிவர வேண்டிய அவசியம் இன்று உணரப்பட்டுள்ளது. பாடநூல்களோடு துணை நூல்கள் பலவும் வெளிவர வேண்டும். விரிந்து வரும் அறிவியல் உண்மைகளைச் சகலரும் இலகுவில் தெரிந்து கொள்வதற்கு இவ்வகை நூல்கள் வழி அமைக்கும்.
No comments:
Post a Comment