Sunday, March 28, 2010

தென் கொரியா கப்பல் மூழ்கியது : 40 பேரை காணவில்லை

தென் கொரியா கப்பல் ஒன்று வட கொரியா அருகே மூழ்கி விட்டதாகவும், அதில் பயணித்த 40 பேரை காணவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென் கொரியாவுக்கும், வட கொரியாவுக்கும் இடையே கடல் எல்லை பிரச்னை நீண்ட காலமாக இருந்து வருகிறது.இதனால் இரு நாடுகளுக்கும் இடையே எப்போதும் பதற்றமான நிலை இருந்து வருகிறது.

இதனிடையே இந்த பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக வட கொரியாவில் தற்போதுள்ள அரசை கவிழ்க்க அமெரிக்காவும், தென் கொரியாவும் முயற்சிப்பதாகவும், ஆனால் ஆட்சியைக் காப்பாற்ற அணு ஆயுத தாக்குதல் நடத்தவும் தாங்கள் தயாராக இருப்பதாகவும் வட கொரியா நேற்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில், வட கொரியாவுடனான கடல் எல்லை பிரச்னை உள்ள இடத்தின் அருகே சுமார் 1,200 டன் எடைகொண்ட தென் கொரிய ரோந்து கப்பல் ஒன்று , 104 பணியாளர்களுடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென மூழ்கியது.

இது குறித்த தகவலறிந்ததும் மீட்பு படையினர், உடனடியாக விரைந்து சென்று 58 பேரை மீட்டனர். ஆனால் 40 பேரை காணவில்லை என்றும், அவர்களை தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தென் கொரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் தங்களது கப்பல் மூழ்கடிக்கப்பட்டதற்கு வட கொரியா காரணமாக இருக்கலாம் என்று தாங்கள் சந்தேகிப்பதாகவும் அந்த அதிகாரி மேலும் கூறினார்

No comments:

Post a Comment

சூரியனின் கதை












நமது சூரியனும் அதன் கோள்களும் அமைந்துள்ள அண்டத்தினைப் பால் வழி என்பர். இரவு வேளையில், தெளிவான வானத்தில், கிழக்கு மேற்காகப் பிரகாசமான ஓர் ஒளிப்பட்டை அமைந்திருப்பதைக் காணலாம். இந்த ஒளிப்பட்டைக்குள் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் இருக்கின்றன. பாலாறு ஒன்று வானத்தில் பாய்வதாகக் கற்பனை செய்து கிரேக்க விஞ்ஞானிகள் இதற்குப் பால் வழி என்று பெயரிட்டனர். இந்தியத் தத்துவ ஞானிகள் 'ஆகாய கங்கை' என்றனர். பால் வழியின் ஒரு அந்தத்தில் நமது சூரியனும் அதன் கோள்களும் அமைந்திருக்கின்றன.


மாணவர்களுக்கு ஏற்ற அடிப்படை அறிவியல் நூல்கள் வெளிவர வேண்டிய அவசியம் இன்று உணரப்பட்டுள்ளது. பாடநூல்களோடு துணை நூல்கள் பலவும் வெளிவர வேண்டும். விரிந்து வரும் அறிவியல் உண்மைகளைச் சகலரும் இலகுவில் தெரிந்து கொள்வதற்கு இவ்வகை நூல்கள் வழி அமைக்கும்
.