Monday, March 15, 2010

“ஜேர்மனியில் வரலாறு காணாத இராட்சத விபத்து!புயலடித்த தேசம்போல காட்சியளிக்கும் நகரம்.

காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் ஒருவரும் மரணமடையவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலநிலையும், தவறாக கார்களை ஓட்டியதுமே காரணம் என்று கூறப்படுகிறது.




ஜேர்மனியில் நேற்று வெள்ளி கிழமை வரலாறு காணாத பெரிய விபத்து இடம் பெற்றது. இந்த அனர்த்தத்தில் சுமார் 231 வாகனங்கள் ஒரேயடியாக சிக்குண்டுபோயின.

ஜேர்மனிய ஊடகங்கள் இதை இராட்சத விபத்து என்று வர்ணித்துள்ளன.

171 கார்களும் 35 பாரவண்டிகளும் இதில் சிக்குண்டன.

ஏ8 பிரதான வீதியில் அவுஸ்பேக் – பிறிட்பேர்க் நகரங்களுக்கு இடையில் இந்த விபத்து இடம் பெற்றது.

இதனால் போக்குவரத்தில் பாரிய நெரிசலும் தடைகளும் ஏற்பட்டுள்ளன. இதுவரை வீதி சீராக்கப்படவில்லை, இப்பகுதி முழுவதும் புயலடித்த தேசம்போல காட்சியளிக்கிறது.

17 முதல் 25 பேர்வரை படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் ஒருவரும் மரணமடையவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலநிலையும், தவறாக கார்களை ஓட்டியதுமே காரணம் என்று கூறப்படுகிறது.


































No comments:

Post a Comment

சூரியனின் கதை












நமது சூரியனும் அதன் கோள்களும் அமைந்துள்ள அண்டத்தினைப் பால் வழி என்பர். இரவு வேளையில், தெளிவான வானத்தில், கிழக்கு மேற்காகப் பிரகாசமான ஓர் ஒளிப்பட்டை அமைந்திருப்பதைக் காணலாம். இந்த ஒளிப்பட்டைக்குள் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் இருக்கின்றன. பாலாறு ஒன்று வானத்தில் பாய்வதாகக் கற்பனை செய்து கிரேக்க விஞ்ஞானிகள் இதற்குப் பால் வழி என்று பெயரிட்டனர். இந்தியத் தத்துவ ஞானிகள் 'ஆகாய கங்கை' என்றனர். பால் வழியின் ஒரு அந்தத்தில் நமது சூரியனும் அதன் கோள்களும் அமைந்திருக்கின்றன.


மாணவர்களுக்கு ஏற்ற அடிப்படை அறிவியல் நூல்கள் வெளிவர வேண்டிய அவசியம் இன்று உணரப்பட்டுள்ளது. பாடநூல்களோடு துணை நூல்கள் பலவும் வெளிவர வேண்டும். விரிந்து வரும் அறிவியல் உண்மைகளைச் சகலரும் இலகுவில் தெரிந்து கொள்வதற்கு இவ்வகை நூல்கள் வழி அமைக்கும்
.