Showing posts with label H.I.V. Treatment. Show all posts
Showing posts with label H.I.V. Treatment. Show all posts

Monday, December 20, 2010

எயிட்ஸ் நோயாளிகளை சுகப்படுத்த முடியும் - ஜெர்மனிய மருத்துவர்கள் :

எயிட்ஸ் நோயாளிகளை சுகப்படுத்த முடியும் என ஜெர்மனிய மருத்துவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். எச்.ஐ.வீ நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரை குணப்படுத்தியதாக ஜெர்மனிய மருத்துவர்ள் அறிவித்துள்ளனர்.

பேர்ளினில் வாழ்ந்து வரும் அமெரிக்கரான திமொத்தி பிரவுண் என்பவருக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. செமோதெரபி மற்றும் ஸ்டெம் செல் தெரபி ஆகியவற்றின் ஊடாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் முதலில் லுகேமியா நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், பின்னர் அவருக்கு எச்.ஐ.வீ நோய்த் தொற்று பரவியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மூன்று ஆண்டு சிகிச்சைகளின் பின்னர் லுகேமிய புற்று நோய் மற்றும் எயிட்ஸ் ஆகிய நோய்களிலிருந்து குறித்த நபர் குணமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. ஸ்டெம் செல் மற்றும் போன் மெரோவ் சிகிச்சைகளின் மூலம் குறித்த நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். எச்.ஐ.வீ. கிருமிக்கு எதிராக போராடக் கூடிய நோய் எதிர்ப்பு சக்தியுடைய நபர் ஒருவரின் போன் மெரேவ் இதற்காக பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. எச்.ஐ.வீ. தொற்றிய நபர் ஒருவர் முழுமையாக சுகப்படுத்தப்பட்ட சந்தர்ப்பமாக இதனை கருதுவதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். எவ்வாறெனினும், சிகிச்சைகளின் போது குறித்த நபர் பல்வேறு பக்க விளைவுகளை எதிர்நோக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சூரியனின் கதை












நமது சூரியனும் அதன் கோள்களும் அமைந்துள்ள அண்டத்தினைப் பால் வழி என்பர். இரவு வேளையில், தெளிவான வானத்தில், கிழக்கு மேற்காகப் பிரகாசமான ஓர் ஒளிப்பட்டை அமைந்திருப்பதைக் காணலாம். இந்த ஒளிப்பட்டைக்குள் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் இருக்கின்றன. பாலாறு ஒன்று வானத்தில் பாய்வதாகக் கற்பனை செய்து கிரேக்க விஞ்ஞானிகள் இதற்குப் பால் வழி என்று பெயரிட்டனர். இந்தியத் தத்துவ ஞானிகள் 'ஆகாய கங்கை' என்றனர். பால் வழியின் ஒரு அந்தத்தில் நமது சூரியனும் அதன் கோள்களும் அமைந்திருக்கின்றன.


மாணவர்களுக்கு ஏற்ற அடிப்படை அறிவியல் நூல்கள் வெளிவர வேண்டிய அவசியம் இன்று உணரப்பட்டுள்ளது. பாடநூல்களோடு துணை நூல்கள் பலவும் வெளிவர வேண்டும். விரிந்து வரும் அறிவியல் உண்மைகளைச் சகலரும் இலகுவில் தெரிந்து கொள்வதற்கு இவ்வகை நூல்கள் வழி அமைக்கும்
.