எயிட்ஸ் நோயாளிகளை சுகப்படுத்த முடியும் என ஜெர்மனிய மருத்துவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். எச்.ஐ.வீ நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரை குணப்படுத்தியதாக ஜெர்மனிய மருத்துவர்ள் அறிவித்துள்ளனர்.
பேர்ளினில் வாழ்ந்து வரும் அமெரிக்கரான திமொத்தி பிரவுண் என்பவருக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. செமோதெரபி மற்றும் ஸ்டெம் செல் தெரபி ஆகியவற்றின் ஊடாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் முதலில் லுகேமியா நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், பின்னர் அவருக்கு எச்.ஐ.வீ நோய்த் தொற்று பரவியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மூன்று ஆண்டு சிகிச்சைகளின் பின்னர் லுகேமிய புற்று நோய் மற்றும் எயிட்ஸ் ஆகிய நோய்களிலிருந்து குறித்த நபர் குணமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. ஸ்டெம் செல் மற்றும் போன் மெரோவ் சிகிச்சைகளின் மூலம் குறித்த நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். எச்.ஐ.வீ. கிருமிக்கு எதிராக போராடக் கூடிய நோய் எதிர்ப்பு சக்தியுடைய நபர் ஒருவரின் போன் மெரேவ் இதற்காக பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. எச்.ஐ.வீ. தொற்றிய நபர் ஒருவர் முழுமையாக சுகப்படுத்தப்பட்ட சந்தர்ப்பமாக இதனை கருதுவதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். எவ்வாறெனினும், சிகிச்சைகளின் போது குறித்த நபர் பல்வேறு பக்க விளைவுகளை எதிர்நோக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பேர்ளினில் வாழ்ந்து வரும் அமெரிக்கரான திமொத்தி பிரவுண் என்பவருக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. செமோதெரபி மற்றும் ஸ்டெம் செல் தெரபி ஆகியவற்றின் ஊடாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் முதலில் லுகேமியா நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், பின்னர் அவருக்கு எச்.ஐ.வீ நோய்த் தொற்று பரவியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மூன்று ஆண்டு சிகிச்சைகளின் பின்னர் லுகேமிய புற்று நோய் மற்றும் எயிட்ஸ் ஆகிய நோய்களிலிருந்து குறித்த நபர் குணமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. ஸ்டெம் செல் மற்றும் போன் மெரோவ் சிகிச்சைகளின் மூலம் குறித்த நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். எச்.ஐ.வீ. கிருமிக்கு எதிராக போராடக் கூடிய நோய் எதிர்ப்பு சக்தியுடைய நபர் ஒருவரின் போன் மெரேவ் இதற்காக பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. எச்.ஐ.வீ. தொற்றிய நபர் ஒருவர் முழுமையாக சுகப்படுத்தப்பட்ட சந்தர்ப்பமாக இதனை கருதுவதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். எவ்வாறெனினும், சிகிச்சைகளின் போது குறித்த நபர் பல்வேறு பக்க விளைவுகளை எதிர்நோக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment