Monday, January 17, 2011

சிம்பு, பரத் மோதல்.


தெலுங்கு ஹிட் படமான 'வேதம்' தமிழில், 'வானமாக' ரீமேக் பண்ணியிருக்கிறார்கள்.

இதில் சிம்பு, அனுஷ்கா, வேகா, பிரகாஷ் ராஜ், சோனியா அகர்வால் ஆகியோர் முக்கியமான ரோல்களில் நடிக்கின்றனர்.

தமிழுக்கு தகுந்தமாதிரி 'வானத்தை' மாற்றியவர்கள், ஸ்டைலிஸ் ப்ளஸ் டெக்னிக்கலாக உருவாக்கினார்களாம்.

வானம் படத்துக்காக வேலை செய்யும் போது, பரத்-சிம்பு இருவருக்கும் உரசல் பற்றிக்கொண்டதாக பேசினார்கள்.

படத்தில் வெஸ்ட்ரன் 'ராக்' இசைக்கலைஞராக நடித்துள்ளார் பரத், இவருக்கு காதலியாக வேகா இணைந்துள்ளார். எவன்டி உன்னை பெத்தான் பாடல் சிம்பு ஸ்பெஷல்.

நான் 'ஹூ ஏம் ஐ' என்ற ராக் பாடலில் என்னை வேறு மாதிரி பார்க்கலாம். நான் பாட்டுக்கு டான்ஸ் பண்றதைவிட, இசைக்கருவியை சீரியசாக வாசிப்பதை ரசிக்கலாம்.

அனுபவம் வாய்ந்த இசைக்கலைஞனைப்போல என் 'மேனரிசம்' இருக்கும். என் கேரக்டருக்காக 'ராக் ஸ்டார்களின்' பாடி லாங்க்வேஜ்ஜை கவனித்து, அச்சு அசலாக நடித்துள்ளேன்.

இந்த வருஷம் திருத்தணி, யுவன் யுவதி, ட்ரிபிள் பைவ் படங்கள் என பிஸியாக நடிக்கிறேன். மல்டி-ஹீரோ சப்ஜெக்ட் படத்தில் நடிப்பது பற்றி என்னிடம் கேட்கிறார்கள்.

ஒரே ஒரு ஹீரோவாக படத்தில் நடிக்கும் போது இனம் புரியாத அழுத்தம் உண்டாகும். படம் ரிலீசான பிறகு 'பாக்ஸ் ஆபிஸ்'வசூலை கணக்கு போட்டு பார்ப்பார்கள்.

மல்டி ஸ்டார்ஸ் படத்தில் நடிக்கும் அனுபவம் அலாதியானது. நல்ல ட்ரென்ட்டும் கூட வானம் படத்துக்காக நடிக்கும் போது சிம்புக்கும் எனக்கும் உரசல் ஏற்பட்டதாக முணுமுணுக்கிறார்கள்.

நாங்க இரண்டு பேரும் நல்ல ப்ரெண்ட்ஸ். எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை என்று பரத் பேசியிருக்கிறாராம்.

No comments:

Post a Comment

சூரியனின் கதை












நமது சூரியனும் அதன் கோள்களும் அமைந்துள்ள அண்டத்தினைப் பால் வழி என்பர். இரவு வேளையில், தெளிவான வானத்தில், கிழக்கு மேற்காகப் பிரகாசமான ஓர் ஒளிப்பட்டை அமைந்திருப்பதைக் காணலாம். இந்த ஒளிப்பட்டைக்குள் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் இருக்கின்றன. பாலாறு ஒன்று வானத்தில் பாய்வதாகக் கற்பனை செய்து கிரேக்க விஞ்ஞானிகள் இதற்குப் பால் வழி என்று பெயரிட்டனர். இந்தியத் தத்துவ ஞானிகள் 'ஆகாய கங்கை' என்றனர். பால் வழியின் ஒரு அந்தத்தில் நமது சூரியனும் அதன் கோள்களும் அமைந்திருக்கின்றன.


மாணவர்களுக்கு ஏற்ற அடிப்படை அறிவியல் நூல்கள் வெளிவர வேண்டிய அவசியம் இன்று உணரப்பட்டுள்ளது. பாடநூல்களோடு துணை நூல்கள் பலவும் வெளிவர வேண்டும். விரிந்து வரும் அறிவியல் உண்மைகளைச் சகலரும் இலகுவில் தெரிந்து கொள்வதற்கு இவ்வகை நூல்கள் வழி அமைக்கும்
.