Sunday, January 16, 2011

அரசியல்வாதிகளை பகைத்த காரணத்தால் விஜய்க்கு வந்த நெருக்கடி

தமிழகத்தின் ஆட்சிப் பீடத்தில் இருக்கும் கலைஞர் குடும்ப அரசியல்வாதிகளை பகைத்தாலும் பகைத்தார் விஜய் அவர் படும்பாடு பெரும் பாடாக இருக்கிறது.

ஒரு திரைப்படம் வெளிவந்தால் நடிகர்களை அழைத்து நிகழ்ச்சி மேல் நிகழ்ச்சிகளை நடாத்தும் சன் டிவி, கலைஞர் ரிவி போன்றன விஜய் பக்கமே திரும்பிப் பார்க்கவில்லை. விஜயகாந்துக்கு நடந்த புறக்கணிப்பே விஜய்க்கும் நடந்துள்ளது.

அரசியல்வாதிகளையும், அதிகார வர்க்கத்தையும் அண்டிப் பிழைப்பது சினிமாவில் முக்கிய அம்சமாக உள்ளதை ரஜினி, கமல் இருவரதும் செயல்களில் காணலாம். விஜய் – அஜித் இருவரும் அந்த வழியை பின்பற்றாத காரணத்தால் இத்தகைய நெருக்கடியை சந்தித்துள்ளனர்.

இன்று தமிழகத்திலும், வெளிநாடுகளிலும் தமிழ் சினிமாவை காண்பிப்பதில் தோன்றியுள்ள சிக்கல்கள் வேறு இனங்களிடையே இல்லாத சிக்கலாக உள்ளது. இந்திப்படங்களில் இத்தகைய இழி நிலை இல்லாமை கவனிக்கத்தக்கது. தமிழ் சினிமா தமிழ் அரசிலை அழிக்குமா இல்லை தமிழ் அரசியல் தமிழ் சினிமாவை அழிக்குமா என்ற போட்டி தமிழகத்தில் ஆரம்பித்துவிட்டது. எப்படியோ அழிவுதான் பரிசு என்பதுதான் இந்தப் போட்டியின் முடிவாகப் போகிறது.

No comments:

Post a Comment

சூரியனின் கதை












நமது சூரியனும் அதன் கோள்களும் அமைந்துள்ள அண்டத்தினைப் பால் வழி என்பர். இரவு வேளையில், தெளிவான வானத்தில், கிழக்கு மேற்காகப் பிரகாசமான ஓர் ஒளிப்பட்டை அமைந்திருப்பதைக் காணலாம். இந்த ஒளிப்பட்டைக்குள் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் இருக்கின்றன. பாலாறு ஒன்று வானத்தில் பாய்வதாகக் கற்பனை செய்து கிரேக்க விஞ்ஞானிகள் இதற்குப் பால் வழி என்று பெயரிட்டனர். இந்தியத் தத்துவ ஞானிகள் 'ஆகாய கங்கை' என்றனர். பால் வழியின் ஒரு அந்தத்தில் நமது சூரியனும் அதன் கோள்களும் அமைந்திருக்கின்றன.


மாணவர்களுக்கு ஏற்ற அடிப்படை அறிவியல் நூல்கள் வெளிவர வேண்டிய அவசியம் இன்று உணரப்பட்டுள்ளது. பாடநூல்களோடு துணை நூல்கள் பலவும் வெளிவர வேண்டும். விரிந்து வரும் அறிவியல் உண்மைகளைச் சகலரும் இலகுவில் தெரிந்து கொள்வதற்கு இவ்வகை நூல்கள் வழி அமைக்கும்
.