Thursday, December 9, 2010

புயலில் தத்தளித்த படக்குழு


வரலாற்றை சினிமாவுக்காக திருப்பியும், புரட்டியும் போட்டு 'உருமி' படத்தை எடுத்து வருகிறார் அவார்டு பட படைப்பாளி "சந்தோஸ் சிவன்".

உருமி என்பது ஒரு வகையான ஆயுதம். பதினைந்தாம் நூற்றாண்டில் நடக்கும் கதையில் இந்திய இளசுகள், வாஸ்கோடா காமாவை தேடிப்போய் கொல்கிறார்களாம்.

ரொம்ப வேகமாக படத்தை எடுத்து முடித்துவிட்டார்களாம். சீரியசான விசயமுள்ள படத்தை இப்படி எடுத்ததால் படத்தில் நடித்த பிருதிவி ராஜ், பிரபு தேவா,ஜெனிலியா, நித்யா மேனன், தபு, வித்யா பாலன் ஆகியோருக்கு ஆச்சர்யம் அடங்கவில்லை.

மும்பைலிருந்து மால்ஷேகாட்ஸ் என்ற இடத்தில் சூட் பண்ணும் போது புயலில் சிக்கிய அனுபவத்தை பெற்றதாம் படக்குழு. அந்த காட்சியில் நடிக்கும் போது பிரபுதேவா ஆடிப்போனாராம்.

படத்துக்காக பணிபுரிந்தவர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை 'உருமி' தந்துள்ளது

No comments:

Post a Comment

சூரியனின் கதை












நமது சூரியனும் அதன் கோள்களும் அமைந்துள்ள அண்டத்தினைப் பால் வழி என்பர். இரவு வேளையில், தெளிவான வானத்தில், கிழக்கு மேற்காகப் பிரகாசமான ஓர் ஒளிப்பட்டை அமைந்திருப்பதைக் காணலாம். இந்த ஒளிப்பட்டைக்குள் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் இருக்கின்றன. பாலாறு ஒன்று வானத்தில் பாய்வதாகக் கற்பனை செய்து கிரேக்க விஞ்ஞானிகள் இதற்குப் பால் வழி என்று பெயரிட்டனர். இந்தியத் தத்துவ ஞானிகள் 'ஆகாய கங்கை' என்றனர். பால் வழியின் ஒரு அந்தத்தில் நமது சூரியனும் அதன் கோள்களும் அமைந்திருக்கின்றன.


மாணவர்களுக்கு ஏற்ற அடிப்படை அறிவியல் நூல்கள் வெளிவர வேண்டிய அவசியம் இன்று உணரப்பட்டுள்ளது. பாடநூல்களோடு துணை நூல்கள் பலவும் வெளிவர வேண்டும். விரிந்து வரும் அறிவியல் உண்மைகளைச் சகலரும் இலகுவில் தெரிந்து கொள்வதற்கு இவ்வகை நூல்கள் வழி அமைக்கும்
.