![]() |
"களவாடிய பொழுதுகள்" படத்துக்காக பிரபு தேவா, படைப்பாளி தங்கர் பச்சான் இருவரும் இணைந்ததை இப்போதும் கோலிவுட்டில் ஆச்சர்யமாக பார்ப்பவர்கள் இருக்கிறார்கள். |
"களவாடிய பொழுதுகள்" படத்துக்காக பிரபு தேவா, படைப்பாளி தங்கர் பச்சான் இருவரும் இணைந்ததை இப்போதும் கோலிவுட்டில் ஆச்சர்யமாக பார்ப்பவர்கள் இருக்கிறார்கள். ![]() தங்கர் எதையும் படு 'ஹாட்டாக' விமர்சனம் செய்யக்கூடியவர் என்றாலும் எங்களுக்குள் நல்ல நட்பு இருந்தது.எத்தனையோ நடிகர்களை விட்டு என்னை 'செலக்ட்' பண்ணியது ஏன்? என்று அவரிடம் கேட்டேன். நீதான் கமர்சியல் நடிகர் என பெயர் எடுத்திருக்கே.அதான் உன்னை கூப்பிட்டேன் என்றார்.டான்ஸ், மசாலா,கலகலப்பு, ஜாலி இதையும் மீறி பிரபு தேவாவுக்குள் இன்னொரு 'பரிணாமம்'இருக்கு என்பதையும் காட்டியுள்ளார். அதையும் சொன்னபடி எடுத்துள்ளார். அருமையாக வந்துள்ளது. நிச்சயம் எனக்கு இது வித்தியாசமான அனுபவம்தான். எனக்கு இருக்கிற கமர்சியல் இமேஜ் எல்லாத்தையும் கழட்டி வெச்சுட்டு நடித்திருக்கேன்.அவர் சீரியசாக படம் எடுத்தாலும்,ஜாலியான மனிதர்.படப்பிடிப்பில் ஒரே ஜாலிதான். களவாடிய பொழுதுகள் சீரியசான படமாக இருந்தாலும் கமர்சியலாக வெற்றி பெறும்.தங்கர் பச்சானும் ஒரு நடிகர்தான். அவரை என் டைரக்சனில் நடிக்க வைத்து 'பெண்ட'நிமிர்த்தி வேலை வாங்க வேண்டும் என்பது என் விருப்பம்' என்கிறார் பிரபு தேவா |
Thursday, December 9, 2010
இரண்டு கோபக்காரர்களை இணைத்த படம்!
Subscribe to:
Post Comments (Atom)
சூரியனின் கதை

நமது சூரியனும் அதன் கோள்களும் அமைந்துள்ள அண்டத்தினைப் பால் வழி என்பர். இரவு வேளையில், தெளிவான வானத்தில், கிழக்கு மேற்காகப் பிரகாசமான ஓர் ஒளிப்பட்டை அமைந்திருப்பதைக் காணலாம். இந்த ஒளிப்பட்டைக்குள் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் இருக்கின்றன. பாலாறு ஒன்று வானத்தில் பாய்வதாகக் கற்பனை செய்து கிரேக்க விஞ்ஞானிகள் இதற்குப் பால் வழி என்று பெயரிட்டனர். இந்தியத் தத்துவ ஞானிகள் 'ஆகாய கங்கை' என்றனர். பால் வழியின் ஒரு அந்தத்தில் நமது சூரியனும் அதன் கோள்களும் அமைந்திருக்கின்றன.
மாணவர்களுக்கு ஏற்ற அடிப்படை அறிவியல் நூல்கள் வெளிவர வேண்டிய அவசியம் இன்று உணரப்பட்டுள்ளது. பாடநூல்களோடு துணை நூல்கள் பலவும் வெளிவர வேண்டும். விரிந்து வரும் அறிவியல் உண்மைகளைச் சகலரும் இலகுவில் தெரிந்து கொள்வதற்கு இவ்வகை நூல்கள் வழி அமைக்கும்.
No comments:
Post a Comment